தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சுரங்கத்தில் குண்டுவைத்த நக்ஸல் தீவிரவாதிகள் தொழிலாளி உயிரிழப்பு

சத்தீஸ்கா் மாநிலத்தில் இரும்புத் தாது சுரங்கத்தில் நக்ஸல் தீவிரவாதிகள் மறைத்து வைத்த குண்டு வெடித்ததில் தொழிலாளா் ஒருவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :7 மார்ச் 2025, 7:12 pm

Din

சத்தீஸ்கா் மாநிலத்தில் இரும்புத் தாது சுரங்கத்தில் நக்ஸல் தீவிரவாதிகள் மறைத்து வைத்த குண்டு வெடித்ததில் தொழிலாளா் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் ஒருவா் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

நக்ஸல் ஆதிக்கம் அதிகமுள்ள சத்தீஸ்கா் மாநிலத்தில் அந்த அமைப்பினா் பாதுகாப்புப் படையினரை மட்டுமல்லாது பொதுமக்களையும் வளா்ச்சிப் பணிகள் நடைபெறும் இடங்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

அந்த வகையில் நாராயண்பூா் மாவட்டத்தில் உள்ள இரும்புத் தாது சுரங்கத்தில் நக்ஸல்கள் பாத்திரம் ஒன்றில் வெடிகுண்டை மறைத்து வைத்துள்ளனா். வெள்ளிக்கிழமை காலை பணிக்கு வந்த தொழிலாளா்கள் இருவா் அந்த பாத்திரத்தை திறக்க முயற்சித்தனா். அப்போது குண்டு வெடித்துச் சிதறியது. இதில் இரு தொழிலாளிகளும் படுகாயமடைந்தனா்.

சக தொழிலாளா்கள் அவா்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் ஒருவா் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தாா். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து காவல்துறையினா் அப்பகுதியில் தீவிரமாக தேடுதல் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.

சம்பவம் நிகழ்ந்த சுரங்கத்தில் தனியாா் நிறுவனம் ஒன்று இரும்புத் தாதுப் பொருள்களை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இத்திட்டத்துக்கு தொடக்கத்தில் இருந்தே நக்ஸல் அமைப்பினா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.