பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

ராகுலின் உதவியால் தொழிலதிபராகும் செருப்புத் தைக்கும் தொழிலாளி!

ராகுல் காந்தியின் உதவியால் புதிய காலணி பிராண்டைத் தொடங்கவுள்ள செருப்புத் தைக்கும் தொழிலாளியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

News image

உத்தரப் பிரதேசத்தில் உள்ள சுல்தான்பூரில் செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் கலந்துரையாடிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

Updated On :9 மார்ச் 2025, 8:41 pm IST

ராகுல் காந்தியின் உதவியால் புதிய காலணி பிராண்டைத் தொடங்கவுள்ள செருப்புத் தைக்கும் தொழிலாளியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

அவதூறு வழக்கு தொடர்பாக, உத்தரப் பிரதேசம் சென்ற ராகுல் காந்தி, தனது ஷூவைத் தைப்பதற்காக சுல்தான்பூரில் ராம்சைத் என்ற தெருவோர செருப்புத் தைக்கும் கடைக்கும் சென்றார். மேலும், கடையில் ஷூவைத் தைத்ததுடன், தானும் தைக்கக் கற்றுக் கொண்டார்.

தொடர்ந்து, ராகுலின் அழைப்பை ஏற்று, அவரது வீட்டுக்கு சென்ற ராம்சைத், தான் தைத்த செருப்பையும் ராகுலுக்கு பரிசாக வழங்கினார். இதனிடையே, ராம்சைத்துக்கு புதிய தையல் இயந்திரம் பரிசாக அனுப்பி வைத்தார். அதுமட்டுமின்றி, மும்பையில் தோல் தொழிலதிபரான சுதீர் ராஜ்பரையும் ராம்சைத்துக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த நிலையில், ராகுல் காந்தி மற்றும் சுதீர் ராஜ்பர் இருவரின் உதவியாலும், உத்வேகத்தினாலும் ராம்சைத் மோச்சி என்ற பெயரில் புதிய காலணி பிராண்டை ராம்சைத் தொடங்கவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.