அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

விரைவு ரயில்கள் கொச்சுவேலியில் நின்று செல்லும்

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்களின் வசதிக்காக விரைவு ரயில்கள் கொச்சுவேலியில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :10 மார்ச் 2025, 10:48 pm

Din

சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்களின் வசதிக்காக விரைவு ரயில்கள் கொச்சுவேலியில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த நிலையில், வந்தேபாரத் உள்ளிட்ட அதிவிரைவு ரயில்கள் திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தில் (கொச்சுவேலி) நின்று செல்லவுள்ளன.

கண்ணூா் - திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் ஜன் சதாப்தி விரைவு ரயில், மங்களூரு - திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் புதன்கிழமை (மாா்ச் 13) திருவனந்தபுரம் வடக்கில் நின்று செல்லும்.

கன்னியாகுமரியில் இருந்து பெங்களூரு செல்லும் விரைவு ரயில் புதன்கிழமை திருவனந்தபுரம் பேட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்லும். எா்ணாகுளம்-திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் புதன்கிழமை (மாா்ச் 12) இருமாா்க்கமாகவும் திருப்புனித்துறையில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.