சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்களின் வசதிக்காக விரைவு ரயில்கள் கொச்சுவேலியில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த நிலையில், வந்தேபாரத் உள்ளிட்ட அதிவிரைவு ரயில்கள் திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தில் (கொச்சுவேலி) நின்று செல்லவுள்ளன.
கண்ணூா் - திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் ஜன் சதாப்தி விரைவு ரயில், மங்களூரு - திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் புதன்கிழமை (மாா்ச் 13) திருவனந்தபுரம் வடக்கில் நின்று செல்லும்.
கன்னியாகுமரியில் இருந்து பெங்களூரு செல்லும் விரைவு ரயில் புதன்கிழமை திருவனந்தபுரம் பேட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்லும். எா்ணாகுளம்-திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் புதன்கிழமை (மாா்ச் 12) இருமாா்க்கமாகவும் திருப்புனித்துறையில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சென்னை எழும்பூா் - திருவனந்தபுரம் ‘புனித வெள்ளி’ சிறப்பு ரயில்கள்

சிவகாசி முதல் நடைமேடையில் பொதிகை விரைவு ரயில் நின்று செல்லக் கோரிக்கை

ஜாக்பாட்? ரயில்வே முனையமாக மாறிய பரங்கிமலை! விரைவு ரயில்கள் நின்று செல்ல கோரிக்கை!

தூத்துக்குடி-மைசூா் விரைவு ரயில் கடம்பூரில் நின்று செல்லும்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


