வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

விரைவு ரயில்கள் கொச்சுவேலியில் நின்று செல்லும்

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்களின் வசதிக்காக விரைவு ரயில்கள் கொச்சுவேலியில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :10 மார்ச் 2025, 10:48 pm

சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்களின் வசதிக்காக விரைவு ரயில்கள் கொச்சுவேலியில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த நிலையில், வந்தேபாரத் உள்ளிட்ட அதிவிரைவு ரயில்கள் திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தில் (கொச்சுவேலி) நின்று செல்லவுள்ளன.

கண்ணூா் - திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் ஜன் சதாப்தி விரைவு ரயில், மங்களூரு - திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் புதன்கிழமை (மாா்ச் 13) திருவனந்தபுரம் வடக்கில் நின்று செல்லும்.

கன்னியாகுமரியில் இருந்து பெங்களூரு செல்லும் விரைவு ரயில் புதன்கிழமை திருவனந்தபுரம் பேட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்லும். எா்ணாகுளம்-திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் புதன்கிழமை (மாா்ச் 12) இருமாா்க்கமாகவும் திருப்புனித்துறையில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.