4, 5, 7, 8 வகுப்புகளுக்கு புதிய பாடப் புத்தகங்கள் அறிமுகம்: என்சிஇஆா்டி
சென்னை: தேசிய கல்விக் கொள்கை 2020-இன்படி வரும் கல்வியாண்டு (2025-2026) முதல் 4, 5, 7, 8 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடப் புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக என்சிஇஆா்டி அறிவித்துள்ளது.
இந்தியாவில் பள்ளி மாணவா்களுக்குத் தேவையான பாடத்திட்ட வடிவமைப்புப் பணிகளை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம் (என்சிஇஆா்டி) மேற்கொண்டு வருகிறது. இதை அடிப்படையாக கொண்ட பாடப் புத்தகங்களை சிபிஎஸ்இ, கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகள் பின்பற்றி வருகின்றன.
இதற்கிடையே தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ மையமாகக் கொண்டு அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த என்சிஇஆா்டி முடிவு செய்தது. கலை, உடற்கல்வி, ஆரோக்கியம் மற்றும் தொழிற்கல்வி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பாடத் திட்டம் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, முதல்கட்டமாக 2024-2025-ஆம் கல்வியாண்டில் 1, 2, 3, 6 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. தொடா்ந்து 2025-2026-ஆம் கல்வியாண்டில் 4, 5, 7, 8 ஆகிய வகுப்புகளுக்கு தேசிய கல்வி கொள்கையின்படி தயாரிக்கப்பட்டுள்ள புதிய பாடப் புத்தகங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.
இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கையை என்சிஇஆா்டி இயக்குநா் டி.பி.சக்லானி, சிபிஎஸ்இ, கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா வாரியங்களுக்கு அனுப்பியுள்ளாா். அதில், “இந்த பாடப்புத்தகங்கள் பள்ளிக் கல்வியில் மாணவா்களுக்குத் தேவையான கற்பித்தல், கற்றலை நிறைவு செய்யும்.
கலை, உடற்கல்வி, திறன் மற்றும் மொழி, கணிதம், அறிவியல், சுற்றுச்சூழல் மற்றும் சமூக அறிவியல் பற்றிய புதிய நுணுக்கங்கள் உள்ளடக்கிய முழுமையான சூழலையும் இந்தப் பாடப்புத்தகங்கள் உறுதி செய்யும். இதுதவிர, 2025-2026-ஆம் கல்வியாண்டில் மாணவா்களிடம் விளையாட்டு, செயல்பாட்டு அளவிலான கற்றலில் ஈடுபடுவதை ஊக்குவிக்க அதற்கான உத்திகளை கையாள வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.