மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சிறுவர்கள்!

பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொல்லப்பட்டது பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :14 மார்ச் 2025, 9:18 pm IST

ராஜஸ்தானில் 15 வயது சிறுமியை இரு சிறுவர்கள் இணைந்து பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் தீக் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி தனது பெற்றோர் கோவிலுக்குச் சென்றதால் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

கோவிலுக்குச் சென்றவர்கள் திரும்பிவந்து பார்த்தபோது சிறுமி மயக்க நிலையில் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உடனடியாக சிறுமியை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அங்கு, சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், அவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் கூறினர்.

இதனைத் தொடர்ந்து, தங்களது அண்டை வீட்டில் வசிக்கும் நபர் மீது சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியான பின்னரே சிறுமி இறப்பு குறித்து முழுமையான விவரம் தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.