எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

தங்கம் கடத்தல்: விசாரணையில் அடித்து துன்புறுத்தப்பட்டேன்! -நடிகை ரன்யா ராவ்

தங்கம் கடத்தல்: விசாரணையில் சித்ரவதை! காவல் துறை மீது நடிகை ரன்யா ராவ் புகார்

News image

ரன்யா ராவ்

Updated On :15 மார்ச் 2025, 9:46 pm IST

தங்கம் கடத்தல் வழக்கு விசாரணையில் தன்னை அடித்து சித்ரவதை செய்ததாக காவல் துறை அதிகாரிகள் மீது நடிகை ரன்யா ராவ் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

கன்னட நடிகை ஹர்ஷவர்தினி ரன்யா(ரன்யா ராவ்) வெளிநாடுகளிலிருந்து சட்டத்துக்கு புறம்பாக ரூ. 12 கோடியிலான தங்கக் கட்டிகளைக் கடத்தி வந்திருப்பது தெரிய வந்ததையடுத்து, அவர் கடந்த மார்ச் 3-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

அவரிடம் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தங்கம் கடத்தல் விவகாரத்தில் அவரிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு அவர் சரிவர பதிலளிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், ரன்யா ராவை மார்ச் 24-ஆம் தேதி 14 நாள்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, தன்னிடம் விசாரணை நடத்திய வருவாய் புலனாய்வுத் துறை இயக்குநரக அதிகாரிகள் வெற்று காகிகதங்களில் கையெழுத்திட்டு வாங்கிக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அப்போது தன்னை அடித்து துன்புறுத்திய அதிகாரிகள் கன்னத்தில் 10 முதல் 15 முறை அடித்து கையெழுத்திட வற்புறுத்தியதாகவும் எனினும், அதிகாரிகளின் இந்த சித்ரவதையை பொருட்படுத்தாமல் தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்திட மறுத்ததாகவும் அவர் வருவாய் புலனாய்வுத் துறை இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குநருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகையின் குற்றச்சாட்டுக்கு மத்தியில், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரது கன்னங்களில் கண்களின் கீழ் கருவளையங்கள் இருந்ததையும் பார்க்க முடிந்தது. இதன்மூலம், அவர் உடல்ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டாரா என்ற சந்தேகம் வலுக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.