தங்கம் கடத்தல் வழக்கு விசாரணையில் தன்னை அடித்து சித்ரவதை செய்ததாக காவல் துறை அதிகாரிகள் மீது நடிகை ரன்யா ராவ் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
கன்னட நடிகை ஹர்ஷவர்தினி ரன்யா(ரன்யா ராவ்) வெளிநாடுகளிலிருந்து சட்டத்துக்கு புறம்பாக ரூ. 12 கோடியிலான தங்கக் கட்டிகளைக் கடத்தி வந்திருப்பது தெரிய வந்ததையடுத்து, அவர் கடந்த மார்ச் 3-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
அவரிடம் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தங்கம் கடத்தல் விவகாரத்தில் அவரிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு அவர் சரிவர பதிலளிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், ரன்யா ராவை மார்ச் 24-ஆம் தேதி 14 நாள்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, தன்னிடம் விசாரணை நடத்திய வருவாய் புலனாய்வுத் துறை இயக்குநரக அதிகாரிகள் வெற்று காகிகதங்களில் கையெழுத்திட்டு வாங்கிக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அப்போது தன்னை அடித்து துன்புறுத்திய அதிகாரிகள் கன்னத்தில் 10 முதல் 15 முறை அடித்து கையெழுத்திட வற்புறுத்தியதாகவும் எனினும், அதிகாரிகளின் இந்த சித்ரவதையை பொருட்படுத்தாமல் தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்திட மறுத்ததாகவும் அவர் வருவாய் புலனாய்வுத் துறை இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குநருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகையின் குற்றச்சாட்டுக்கு மத்தியில், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரது கன்னங்களில் கண்களின் கீழ் கருவளையங்கள் இருந்ததையும் பார்க்க முடிந்தது. இதன்மூலம், அவர் உடல்ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டாரா என்ற சந்தேகம் வலுக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









