சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திக் காட்டுவோம்! ராகுல் சூளுரை

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ராகுல் காந்தி கருத்து..

News image
ராகுல் காந்தி - கோப்புப் படம்
Updated On :18 மார்ச் 2025, 7:11 am

DIN

நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயமாக நடைபெறும் என்றும் அதனை நாங்கள் நடத்திக் காட்டுவோம் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதனடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் மசோதாவை சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றினர்.

பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 29 சதவிகிதத்தில் இருந்து 42 சதவிகிதமாக அதிரடியாக உயர்த்தி மசோதாவை ஒருமதனாக நிறைவேற்றியுள்ளது தெலங்கானா அரசு.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:

”தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அதிகரிப்போம் என்று காங்கிரஸ் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாநிலத்தில் அறிவியல் பூர்வமாக நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் உண்மையான எண்ணிக்கை கண்டறியப்பட்டதன் மூலம் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியலில் அவர்களுக்கு சம பங்களிப்பை உறுதி செய்யும் நோக்கில், இடஒதுக்கீட்டை 42 சதவிகிதமாக உயர்த்தி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

சமூக நீதியை நோக்கிய புரட்சிகரமான முன்னெடுப்பாகும். இதன்மூலம் 50 சதவிகித இடஒதுக்கீடு என்ற சுவர் இடிக்கப்பட்டுள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பு தரவுகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு சமூகத்தின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம், அனைவரின் நல்வாழ்வையும் உறுதி செய்யும் வகையில் கொள்கைகள் வகுக்கப்படும். இதற்கான குழுவையும் தெலங்கானா அரசு அமைத்துள்ளது.

தெலங்கானா காட்டிய வழியை நாடு முழுவதும் பின்பற்ற வேண்டும். நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயமாக நடைபெறும். நாங்கள் அதனை நடத்திக் காட்டுவோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.