நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

விரைவில் இந்தியா வருகிறார் சுனிதா வில்லியம்ஸ்?!

சுனிதா வில்லியம்ஸ் விரைவில் இந்தியா வரவிருப்பதாக அவரது உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

News image

சுனிதா வில்லியம்ஸ்..

Updated On :19 மார்ச் 2025, 11:34 am IST

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விஞ்ஞானியான சுனிதா வில்லியம்ஸ் விரைவில் இந்தியா வரவிருப்பதாக அவரது உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க விண்வெளி வீரர்களை அழைத்து வர அனுப்பப்பட்ட டிராகன் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸ் உள்பட 4 விண்வெளி வீரர்களுடன் இந்திய நேரப்படி இன்று(மார்ச் 19) அதிகாலை 3.30 மணியளவில் பூமியில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

286 நாள்கள் விண்வெளியில் ஆராய்ச்சியில் இருந்த சுனிதா வில்லியம்ஸ், பூமிக்கு திரும்பியதும் அனைவரும் வாழ்த்து தெரிவித்தும், அவரது சொந்த ஊரான குஜராத்தில் பட்டாசு வெடித்தும் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி சுனிதா வில்லியம்ஸின் உறவினர் 59 வயதான ஃபால்குனி பாண்டியா பேசுகையில், “சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது குழுவினரை டிராகன் விண்கலம் பூமிக்கு அழைத்து வந்தது நம்பமுடியாததாக இருந்தது. சுனிதா வில்லியம்ஸ் விரைவில் தனது சொந்த நாடான இந்தியாவுக்கு வர இருக்கிறார்.

அவரது குடும்பத்தினர் விடுமுறையில் இங்கு வர திட்டமிட்டுள்ளனர். குடும்பத்துடன் நிறைய நேரம் செலவிடப் போகிறோம் என்று கூறியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சுனிதா வில்லியம்ஸ் தரப்பில் இருந்து எந்தவித அதிகாரபூர்வ தகவல்களும் வெளியிடப்படவில்லை.

முன்னதாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சுனிதா வில்லியம்ஸுக்கு எழுதியிருந்த கடிதத்தில், “நீங்கள் ஆயிரக்கணக்கான கி.மீ. தொலைவில் இருந்தாலும், தொடர்ந்து எங்கள் இதயத்துக்கு நெருக்கமாக இருக்கிறீர்கள். இந்திய மக்கள் உங்கள் ஆரோக்கியத்துக்காகவும் வெற்றிக்காகவும் பிரார்த்தனை செய்கிறார்கள். பூமிக்கு திரும்பிய பிறகு, இந்தியாவில் உங்களைப் பார்ப்பதற்கு நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.