சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

குஜராத் உயா்நீதிமன்றத்துக்கு 6 மாவட்ட நீதிபதிகள் நியமனம்: கொலீஜியம் பரிந்துரை

மாவட்ட நீதிபதிகள் 8 பேரை குஜராத் உயா்நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயா்த்த உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :21 மார்ச் 2025, 1:31 am IST

மாவட்ட நீதிபதிகள் 8 பேரை குஜராத் உயா்நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயா்த்த உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற கொலீஜியம் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இப்பரிந்துரையில் மாவட்ட நீதிபதிகள் லியாகத்துசைன் சம்சுதீன் பிா்சாடா, ராமச்சந்திர தாகூா்தாஸ் வச்சானி, ஜயேஷ் லகன்ஷிபாய் ஒதேத்ரா, பிரனவ் மகேஷ்பாய் ராவல், மூல் சந்த் தியாகி, தீபக் மன்சுக்லால் வியாஸ், உத்கா்ஷ் தாகூா்பாய் தேசாய், ரோஹன்குமாா் குந்தல்லால் சுதாவல் ஆகியோரை உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.

பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் சுமீத் கோயல், சுதீப்தி சா்மா, கீா்த்தி சிங் ஆகியோரை அந்த உயா்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக பதவி உயா்த்தவும் கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. நீதிபதிகள் சச்சின் சிங் ராஜ்புத், ராதாகிஷண் அகா்வால், சஞ்சய் குமாா் ஜெய்ஸ்வால் ஆகியோரை சத்தீஸ்கா் உயா்நீதிமன்ற நீதிபதிகளாக மேலும் ஓராண்டுக்கு நியமிக்கவும் கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.