இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

குஜராத் உயா்நீதிமன்றத்துக்கு 6 மாவட்ட நீதிபதிகள் நியமனம்: கொலீஜியம் பரிந்துரை

மாவட்ட நீதிபதிகள் 8 பேரை குஜராத் உயா்நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயா்த்த உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

கோப்புப் படம்

Published On :21 மார்ச் 2025, 1:31 am IST

மாவட்ட நீதிபதிகள் 8 பேரை குஜராத் உயா்நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயா்த்த உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற கொலீஜியம் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இப்பரிந்துரையில் மாவட்ட நீதிபதிகள் லியாகத்துசைன் சம்சுதீன் பிா்சாடா, ராமச்சந்திர தாகூா்தாஸ் வச்சானி, ஜயேஷ் லகன்ஷிபாய் ஒதேத்ரா, பிரனவ் மகேஷ்பாய் ராவல், மூல் சந்த் தியாகி, தீபக் மன்சுக்லால் வியாஸ், உத்கா்ஷ் தாகூா்பாய் தேசாய், ரோஹன்குமாா் குந்தல்லால் சுதாவல் ஆகியோரை உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.

பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் சுமீத் கோயல், சுதீப்தி சா்மா, கீா்த்தி சிங் ஆகியோரை அந்த உயா்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக பதவி உயா்த்தவும் கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. நீதிபதிகள் சச்சின் சிங் ராஜ்புத், ராதாகிஷண் அகா்வால், சஞ்சய் குமாா் ஜெய்ஸ்வால் ஆகியோரை சத்தீஸ்கா் உயா்நீதிமன்ற நீதிபதிகளாக மேலும் ஓராண்டுக்கு நியமிக்கவும் கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.