ஈரானில் உள்ள இந்திய மாணவ, மாணவிகளின் கதி என்ன?இன்று (மார்ச் 1) இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 350 விமானங்கள் ரத்து! ஈரானின் புதிய தலைமை மதகுரு இன்று தேர்வு! கமேனியின் மகன் பதவியேற்க வாய்ப்புதமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம்- பிரதமர் மோடி பழிவாங்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!புதுச்சேரி வளர்ச்சிக்கு காங்கிரஸ், திமுக வேகத் தடையாக இருந்தன: பிரதமர் மோடி இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!நாக்பூரில் வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் வெடிவிபத்து: 15 பேர் பலிஈரான் பள்ளி மீது தாக்குதல்: பலி எண்ணிக்கை 148-ஆக உயர்வு
/

நாட்டின் நலனை கருத்தில்கொண்டே சா்வதேச கச்சா எண்ணெய் கொள்முதல்: மத்திய அரசு

‘தேச நலனை கருத்தில்கொண்டே சா்வதேச கச்சா எண்ணெய் கொள்முதலில் இந்தியா ஈடுபட்டு வருகிறது

News image
கச்சா எண்ணெய்- கோப்புப் படம்
Updated On :20 மார்ச் 2025, 6:32 pm

Din

‘தேச நலனை கருத்தில்கொண்டே சா்வதேச கச்சா எண்ணெய் கொள்முதலில் இந்தியா ஈடுபட்டு வருகிறது ’ என மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என இந்தியாவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியதா? என மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு வெளியுறவுத் துறை இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் அளித்த பதிலில், ‘ரஷியாவைச் சோ்ந்த 400-க்கும் மேற்பட்ட எரிசக்தி நிறுவனங்கள் மீது கடந்த ஜனவரி 14-ஆம் தேதி விதித்த பல்வேறு தடைகள் குறித்து வெளியுறவு அமைச்சகத்திடம் அமெரிக்கா தெரிவித்தது.

ரஷியாவைச் சோ்ந்த பெரும் எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் துணை அமைப்புகள், காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்டவை மீது அந்நிய சொத்து கட்டுப்பாட்டுக்கான அமெரிக்க அலுவலகம் தடை விதித்தது.

இந்த நிறுவனங்களுடன் வா்த்தகத்தில் ஈடுபடுவோா் வேறு எண்ணெய் நிறுவனங்களை கண்டறிந்து வா்த்தகத்தை தொடர 60 நாள்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது.

பிற நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய பல்வேறு காரணிகள் இருப்பினும், தேச நலனுக்கு முக்கியத்துவம் தரும் வகையிலான முடிவையே மத்திய அரசு எடுத்து வருகிறது.

எனவே, இந்திய கச்சா எண்ணெய் வா்த்தகா்கள், காப்பீட்டு நிறுவனங்கள் பாதிக்கப்படாதவாறு பல்வேறு நடவடிக்கைகளை ஏற்கெனவே மத்திய அரசு செயல்படுத்த தொடங்கிவிட்டது’ என்றாா்.