நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்

ரஷியாவிடம் இருந்து ஏப்ரல் மாதத் தேவைக்காக இந்தியா 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்துள்ளது.

News image

கச்சா எண்ணெய்

கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 9:27 pm

தினமணி செய்திச் சேவை

ரஷியாவிடம் இருந்து ஏப்ரல் மாதத் தேவைக்காக இந்தியா 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்துள்ளது.

மத்திய கிழக்குப் போரால் எரிபொருள் பிரச்னை, முக்கியமாக சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

முன்னதாக, 3 ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்ததால் ஐரோப்பிய நாடுகள் ரஷியாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்தின. இதையடுத்து, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு சலுகை விலையில் கச்சா எண்ணெய் ரஷியா விற்பனை செய்தது.

ஆனால், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று இந்தியாவுக்கு அமெரிக்கா கடந்த சில மாதங்களாக கடுமையான அழுத்தம் கொடுத்து வந்தது. இதையடுத்து, ரஷிய கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா படிப்படியாகக் குறைத்தது.

இந்த நிலையில், ஈரானுடன் போா் தொடங்கிய பிறகு சா்வதேச அளவில் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் எழுந்ததால், ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்கிக் கொள்ள இந்தியாவுக்கு அனுமதியளித்தது.

அதன் மூலம், ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கியுள்ளது. முன்புபோல சலுகை விலையில் இல்லாமல் சந்தை விலையிலேயே இந்தக் கொள்முதல் நடைபெற்றுள்ளதாகத் தெரிகிறது.

முன்னதாக, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதன் மூலம் உக்ரைன் போருக்கு உதவுவதாகக் கூறி இந்தியா மீது கடுமையான வரி விதிப்பை அமெரிக்க அதிபா் டிரம்ப் மேற்கொண்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.