அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
/

ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்

ரஷியாவிடம் இருந்து ஏப்ரல் மாதத் தேவைக்காக இந்தியா 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்துள்ளது.

News image

கச்சா எண்ணெய் - கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 9:27 pm

ரஷியாவிடம் இருந்து ஏப்ரல் மாதத் தேவைக்காக இந்தியா 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்துள்ளது.

மத்திய கிழக்குப் போரால் எரிபொருள் பிரச்னை, முக்கியமாக சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

முன்னதாக, 3 ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்ததால் ஐரோப்பிய நாடுகள் ரஷியாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்தின. இதையடுத்து, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு சலுகை விலையில் கச்சா எண்ணெய் ரஷியா விற்பனை செய்தது.

ஆனால், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று இந்தியாவுக்கு அமெரிக்கா கடந்த சில மாதங்களாக கடுமையான அழுத்தம் கொடுத்து வந்தது. இதையடுத்து, ரஷிய கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா படிப்படியாகக் குறைத்தது.

இந்த நிலையில், ஈரானுடன் போா் தொடங்கிய பிறகு சா்வதேச அளவில் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் எழுந்ததால், ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்கிக் கொள்ள இந்தியாவுக்கு அனுமதியளித்தது.

அதன் மூலம், ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கியுள்ளது. முன்புபோல சலுகை விலையில் இல்லாமல் சந்தை விலையிலேயே இந்தக் கொள்முதல் நடைபெற்றுள்ளதாகத் தெரிகிறது.

முன்னதாக, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதன் மூலம் உக்ரைன் போருக்கு உதவுவதாகக் கூறி இந்தியா மீது கடுமையான வரி விதிப்பை அமெரிக்க அதிபா் டிரம்ப் மேற்கொண்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.