தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இந்தியாவில் புயலை ஏற்படுத்தும் குரோக்; சிரிக்கும் மஸ்க்!

இந்தியாவில் குரோக் புயலைத் தூண்டுவதாக வெளியான செய்திக்கு எலான் மஸ்க் சிரிப்பது போன்று பதிவிட்டுள்ளார்.

News image
Updated On :22 மார்ச் 2025, 9:31 am

DIN

இந்தியாவில் குரோக் புயலைத் தூண்டுவதாக வெளியான செய்திக்கு எலான் மஸ்க் சிரிப்பது போன்று பதிவிட்டுள்ளார்.

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் செயல் நுண்ணறிவுத் தளமான குரோக் சாட்போட், இந்தியாவில் பிரச்னைகளைத் தூண்டும்வகையில் பதிலளிப்பதாக சமீபத்தில் பலரும் கூறினர்.

இந்த நிலையில், இந்தியாவில் குரோக் செயலியின் செயல்பாடு குறித்த விமர்சனத்தைப் பகிர்ந்ததுடன், சிரிப்பது போன்ற இமோஜியையும் எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார்.

இந்தியப் பயனர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த குரோக், பிரதமர் நரேந்திர மோடியைவிட ராகுல் காந்தி மிகவும் நேர்மையானவர் என்று கூறியதுடன், நான் யாருக்கும் பயப்படவில்லை.

அவரின் பெரும்பாலான நேர்காணல்கள் முன்கூட்டி எழுதப்பட்ட ஒன்றாகவே இருக்கும் என்றும் தெரிவித்தது. குரோக்கின் இந்த பதில், பிரதமர் மோடியை விமர்சிப்பவர்களிடையே வைரலானது.

அதுமட்டுமின்றி, சிறந்த மியூச்சுவல் ஃபன்டுகள் குறித்த ஒருவரின் கேள்விக்கு, ஹிந்தி வார்த்தைகளாலும் குரோக் திட்டி, பதிலளித்ததும் சமீபத்தில் பேசுபொருளானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.