‘ட்விட்டா் நிறுவனத்தை (தற்போது எக்ஸ்) கையகப்படுத்தும் முன், அதன் பங்குகள் சரிவதற்குத் தனது ட்வீட்கள் காரணமல்ல’ என்று எலான் மஸ்க் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளாா்.
பிரபல சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை, 4,400 கோடி டாலருக்கு எலான் மஸ்க் கடந்த 2022-இல் வாங்கினாா். அதற்கு முன்பு நிறுவனத்தின் மதிப்பைக் குறைக்கும் எலான் மஸ்க்கின் முயற்சியில், முதலீட்டாளா்களுக்குப் பல கோடி டாலா் இழப்பு ஏற்பட்டதாகக் கூறி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணையில் ஆஜரான எலான் மஸ்க், ‘ட்விட்டா் வழங்கிய தகவல்கள் பொய்யானவை. அத்தளத்தில் 20 சதவீதத்துக்கும் மேல் போலிக் கணக்குகள் இருந்தன’ என்று மீண்டும் வலியுறுத்தினாா்.
தொடா்ந்து சாட்சியமளித்த ட்விட்டா் நிறுவன முன்னாள் அதிகாரி, எலான் மஸ்க்கின் குற்றச்சாட்டுகளை நிராகரித்ததோடு, சுமாா் 1 சதவீத போலி கணக்குகளே இருந்ததாகவும் குறிப்பிட்டாா்.
தொடர்புடையது

‘எக்ஸ்’ தளத்தில் ஆபாச உள்ளடக்கம்: எலான் மஸ்குக்கு பிரான்ஸ் அழைப்பாணை

மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு
ஈரான் போர்! மோடி, டிரம்ப்புடன் எலான் மஸ்க் உரையாடல்?

2 நாள் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


