புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

மோசமான சாலைகளுக்கு ஏன் வரி செலுத்த வேண்டும்? மத்திய அரசுக்கு ராஜஸ்தான் எம்.பி. கேள்வி!

தேசிய நெடுஞ்சாலைகள் மோசமான நிலையில் இருப்பதாக ராஜஸ்தான் எம்.பி. ஹனுமான் பெனிவால் கேள்வி எழுப்பினார்.

News image

கோப்புப் படம்

Updated On :22 மார்ச் 2025, 12:43 pm IST

தேசிய நெடுஞ்சாலைகளின் சுங்க வரிகளுக்கு ஏற்றாற்போல சாலைகள் இல்லை என்று நாடாளுமன்றத்தில் ராஜஸ்தான் எம்.பி. ஹனுமான் பெனிவால் கேள்வி எழுப்பினார்.

தேசிய நெடுஞ்சாலை 48 வழியாக ஜெய்ப்பூர் - டெல்லி நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களின் மூலம் சுங்க வரியாக 11,945 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக, நாடாளுமன்றத்தில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையின் கட்டுமானச் செலவைவிட வசூலிக்கப்படும் சுங்க வரி அதிகமாக இருப்பதாகக் கூறி, ராஜஸ்தான் எம்.பி. ஹனுமான் பெனிவால் கேள்வி எழுப்பினார். அவர் மேலும் கூறியதாவது, ``ஜெய்ப்பூர் - டெல்லி நெடுஞ்சாலையில் கிட்டத்தட்ட ரூ. 12,000 கோடி சுங்கச் சாவடி வசூலிக்கப்பட்டது. ஆனால், சாலைகளின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும்போது, சாமானிய மக்கள் ஏன் அதனைச் செலுத்த வேண்டும்?

ராஜஸ்தானில் பல தேசிய நெடுஞ்சாலைகள் மோசமான நிலையில் உள்ளன என்பதை அரசு அறிந்திருக்கிறதா? அத்தகைய சாலைகளில் சுங்க வரி வசூல் செய்வது குறித்து அமைச்சகம் விளக்கமளிக்க வேண்டும். சாலை கட்டுமான செலவைவிட அதிக சுங்கச்சாவடி வசூலித்த போதிலும், தேசிய நெடுஞ்சாலைகளின் நிலை மோசமாக உள்ளது.

இதுகுறித்து, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியிருந்தது. மோசமான சாலைகளுக்காக பயணிகள் ஏன் சுங்கச்சாவடி செலுத்த வேண்டும்? அதன் விளைவுகளை சாமானிய மக்கள் ஏன் சந்திக்க வேண்டும்? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இருப்பினும், உச்ச நீதிமன்றத்தின் கருத்துக்கள் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மறைமுகமாக வசூலிக்கப்படும் சுங்கச்சாவடிகளை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.