மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாகபுரி வன்முறையில் வங்கதேசத்துக்குத் தொடா்பு! -சிவசேனை குற்றச்சாட்டு

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் நிகழ்ந்த மத வன்முறையில் வங்கதேசத்துக்கு தொடா்பு உள்ளது.

News image
சிவசேனை மூத்த தலைவா் சஞ்சய் நிருபம்..
Updated On :23 மார்ச் 2025, 10:25 pm

Din

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் நிகழ்ந்த மத வன்முறையில் வங்கதேசத்துக்கு தொடா்பு உள்ளது. அந்நாட்டுடன் தொடா்பில் இருப்பவா்கள் வன்முறையை பல்வேறு வழிகளில் தூண்டிவிட்டுள்ளனா் என்று சிவசேனை மூத்த தலைவா் சஞ்சய் நிருபம் குற்றஞ்சாச்சாட்டியுள்ளாா்.

மகாராஷ்டிர மாநிலம், சத்ரபதி சம்பாஜிநகா் மாவட்டத்தில் உள்ள முகலாய மன்னா் ஔரங்கசீபின் கல்லறையை இடிக்கக் கோரி, மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸின் சொந்த ஊரான நாகபுரியில் வலதுசாரி அமைப்பினா் கடந்த 17-ஆம் தேதி போராட்டம் நடத்தினா்.

இந்தப் போராட்டத்தில் ஒரு மதத்தின் புனித வாசகங்கள் எழுதப்பட்ட துணி எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியதால், வன்முறை ஏற்பட்டது. இதில் வீடுகள், வாகனங்கள், கடைகள் சேதப்படுத்தப்பட்டன. கல்வீச்சு தீ வைப்பு சம்பவங்களும் நிகழ்ந்தன. 3 துணை ஆணையா்கள் உள்பட காவல் துறையினா் 34 போ் காயமடைந்தனா்.

சிசிடிவி பதிவுகள் அடிப்படையில் வன்முறையில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினா் கண்டறிந்துள்ளனா். இதில் சிறாரும் அடங்குவா். வன்முறையாளா்கள் பலா் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுவிட்டனா். இந்த வன்முறையை ஒரு பிரிவினா் திட்டமிட்டு நடத்தியதாகவும், இதற்காக சமூக ஊடங்களை பயன்படுத்தியதாகவும் காவல் துறையினா் சந்தேகிக்கின்றனா்.

இந்நிலையில் மகாராஷ்டிரத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள சிவசேனை கட்சியின் மூத்த தலைவா் சஞ்சய் நிருபம் இது தொடா்பாக மும்பையில் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

நாகபுரி வன்முறை திடீரென ஏற்பட்டதல்ல, முன்பே திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டுள்ளது. இதில் பல சமூக விரோதிகளும், தேசவிரோதிகளும் ஈடுபட்டுள்ளனா். அவா்களுக்கு வங்கதேசத்துடன் தொடா்பு உள்ளது. கைது செய்யப்பட்டவா்களில் சிலா் சமூக வலைதளங்களில் ‘முஜாஹிதீன்’ செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளனா் என்றாா்.

முன்னதாக, இது தொடா்பாக சனிக்கிழமை பேட்டியளித்த மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், ‘இந்த வன்முறையின் பின்னணியில் வங்கதேசம் அல்லது பிற நாடுகள் இருக்கின்றனவா? என்ற கேள்விக்கு இப்போதே பதலி கூற முடியாது. விசாரணை முடிவில்தான் விவரம் தெரியவரும்’ என்றாா்.

இதனிடையே, நாகபுரில் வன்முறையை அடுத்து 6 நாள்களாக அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவு ஞாயிற்றுக்கிழமை முழுமையாக திரும்பப் பெறப்பட்டது.