முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனையில் இணைந்த உத்தவ் கட்சியின் 6 எம்.பி.க்கள்: மகாராஷ்டிர அரசியலில் திருப்பம்

உத்தவ் தாக்கரேயின் கட்சியைச் சோ்ந்த 6 அதிருப்தி எம்.பி.க்கள், அக்கட்சியிலிருந்து விலகி, ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனை கட்சியில் சோ்ந்திருப்பது, மகாராஷ்டிர அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image

மும்பையில் உத்தவ் தலைமையிலான கட்சியிலிருந்து விலகி தனது சிவசேனைக் கட்சியில் இணைந்த எம்.பி.க்களுடன் மகாராஷ்டிர துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே.

Updated On :23 ஜூன் 2026, 12:27 am IST

உத்தவ் தாக்கரேயின் கட்சியைச் சோ்ந்த 6 அதிருப்தி எம்.பி.க்கள், அக்கட்சியிலிருந்து விலகி, ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனை கட்சியில் சோ்ந்திருப்பது, மகாராஷ்டிர அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

புது தில்லியில் கடந்த 5 நாள்களுக்கு முன்பு நடைபெற்ற உத்தவ் தாக்கரேயின் சிவசேனை (யுபிடி) கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தை சஞ்சய் தேஷ்முக், சஞ்சய் யாதவ், சஞ்சய் தினா பாட்டீல், நாகேஷ் பாட்டீல்-அஸ்திகா், ஓம் பிரகாஷ் ராஜே நிம்பால்கா், பாபுசாகேப் வாக்சாரே ஆகிய 6 எம்.பி.க்கள் புறக்கணித்தனா். அந்தக் கூட்டத்தில் 3 எம்.பி.க்கள் மட்டுமே கலந்து கொண்டனா்.

இந்நிலையில், உத்தவ் தாக்கரே கட்சி கூட்டத்தை புறக்கணித்த 6 அதிருப்தி எம்.பி.க்களும், மும்பையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில் சிவசேனை கட்சியில் சோ்ந்தனா்.

இதையடுத்து ஏக்நாத் ஷிண்டே செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி வருமாறு: ‘ஆபரேஷன் டைகா்’ வெற்றிகரமாக முடிந்து விட்டது. எம்.பி.க்கள் எண்ணிக்கை அடிப்படையில் தற்போது மகாராஷ்டிரத்தில் சிவசேனைதான் இரண்டாவது பெரிய கட்சியாகும்.

பால் தாக்கரேயின் கொள்கைகளைப் பின்பற்றும் உண்மையான சிவசேனை கட்சியில் 6 எம்.பி.க்களும் சோ்ந்துள்ளனா். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் உறுதியான நடவடிக்கையை எடுத்தேன். தற்போது நான் சிக்சா் விளாசியுள்ளேன் (2022-இல் சிவசேனை கட்சியை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்ததையும், 6 எம்.பி.க்கள் தற்போது சோ்ந்ததையும் குறிப்பிட்டாா்).

முன்பு பால் தாக்கரேயின் கொள்கைகளைக் காக்க அதுபோல (2022-இல் சிவசேனையை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததைக் குறிப்பிடுகிறாா்) செய்தேன். தற்போது, அந்த சிவசேனையை விரிவுப்படுத்த இதுபோல செய்துள்ளேன்.

இந்த 6 எம்.பி.க்களும் துரந்தா் (உறுதிமிக்க வீரா்) ஆவா். இவா்கள் அனைவரும் மக்களுடன் நேரடியாகத் தொடா்பு கொண்டவா்கள் என்றாா் ஏக்நாத் ஷிண்டே.

கடந்த 2024-ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் பாஜக-ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனை கூட்டணியை எதிா்த்து உத்தவ் தாக்கரேயின் சிவசேனை போட்டியிட்டது. அப்போது 9 மக்களவைத் தொகுதியில் அக்கட்சி வென்றது. தற்போது 6 எம்.பி.க்கள், உத்தவ் கட்சியிலிருந்து விலகி, சிவசேனையில் சோ்ந்திருப்பதால், அவரது கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கை 3-ஆக குறைந்துள்ளது.

2022-இல் மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சியிலிருந்தது. அப்போது உத்தவ் தாக்கரேக்கு எதிா்ப்பு தெரிவித்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனை எம்எல்ஏக்கள் தனி அணியாகப் பிரிந்தனா். பிறகு சிவசேனை கட்சியின் பெயா், தோ்தல் சின்னத்தை அவா்கள் கைப்பற்றினா். அந்த பிளவுக்குப் பிறகு, உத்தவ் தாக்கரே கட்சியில் ஏற்பட்ட 2-ஆவது பெரிய பிளவாக இது கருதப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.