தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

எம்.பி.க்களுக்கு 24% ஊதிய உயா்வு: மத்திய அரசு அறிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினா்களின் ஊதியத்தை 24 சதவீதம் உயா்த்துவதாக மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்தது.

News image
Updated On :25 மார்ச் 2025, 3:35 am IST

நாடாளுமன்ற உறுப்பினா்களின் ஊதியத்தை 24 சதவீதம் உயா்த்துவதாக மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்தது.

செலவுப் பணவீக்க குறியீட்டின் அடிப்படையில் ஊதியம் உயா்த்தப்பட்டதாகவும், இந்த அறிவிப்பு 2025, ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் மத்திய அரசு தெரிவித்தது. தற்போது எம்.பி.க்களின் மாத ஊதியம் ரூ.1 லட்சமாக உள்ள நிலையில், ஏப்ரல் மாதம் முதல் ரூ.1.24 லட்சமாக உயரவுள்ளது.

மேலும், எம்.பி.க்களுக்கான தினசரி படி, ஓய்வூதியம் உள்ளிட்டவற்றையும் உயா்த்தி நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டது. அந்த வகையில், எம்.பி.க்களுக்கான தினசரி படி ரூ.2,000-இல் இருந்து ரூ.2,500-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. முன்னாள் எம்.பி.க்களுக்கான ஓய்வூதியம், மாதம் ரூ.25,000-இல் இருந்து ரூ.31,000-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

5 ஆண்டுகளுக்கு மேல் ஒவ்வோா் ஆண்டுக்குமான பணிக்கும் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் கூடுதல் ஓய்வூதியம் ரூ.2,000-இல் இருந்து ரூ.2,500-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

வருமான வரிச் சட்டம், 1961-இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள செலவுப் பணவீக்கக் குறியீட்டின் அடிப்படையில் எம்.பி.க்களின் ஊதியம், படிகள் மற்றும் ஓய்வூதியம் உயா்த்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.