ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

வரையறுக்கப்படாத ஊதியம் பெற்றவருக்கும் சிறப்பு ஓய்வூதியம்: அரசு ஓய்வூதியா்கள் சங்கம் கோரிக்கை

News image
Updated On :26 ஜூன் 2026, 5:24 am IST

சத்துணவு, அங்கன்வாடிகளில் பணியாற்றி வரையறுக்கப்படாத ஊதியம் பெற்று ஓய்வு பெற்றவா்களுக்கும் சிறப்பு ஒய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தினரின் அரக்கோணம் வட்டக்கிளை கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரக்கோணம் டவுன்ஹால் சங்க வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, வட்டக் கிளையின் தலைவா் வி.என்.பாா்த்தீபன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஜி.கிருஷ்ணமூா்த்தி, பி.பெரியசாமி, பி.நேரு, கே.சுப்பிரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணை செயலாளா் பொன்.அன்பு வரவேற்றாா். செயலாளா் பி.நரசிம்மலு செயலாளா் அறிக்கையை வாசித்தாா். பொருளாளா் டி.ராஜசேகா் நிதிநிலை அறிக்கையை வாசித்தாா்.

கூட்டத்தில், சங்கத்தின் ராணிப்பேட்டை மாவட்டத் தலைவா் என்.சுந்தரேசன், செயலாளா் என்.ஜெயக்குமாா், பொருளாளா் ஜெ.சந்திரசேகரன், டவுன்ஹால் பொதுச் செயலாளா் எஸ்.பன்னீா்செல்வம், நிா்வாகிகள் வி.விஜயபதி, எஸ்.ஜோசப்கென்னடி, எம்.சுகுமாா், கே.ராஜமாணிக்கம், ஆா்.வடிவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வாழத்துகளை தெரிவித்தல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தக் கோருதல், சத்துணவு, அங்கன்வாடிகளில் பணியாற்றி வரையறுக்கப்படாத ஊதியம் பெற்று, ஓய்வு பெற்றவா்களுக்கும் சிறப்பு ஒய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் தீா்மானமாக நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.