மும்பையில் ஏக்நாத் ஷிண்டேவை கேலி செய்து பேசியதால் நகைச்சுவைப் பேச்சாளர் குணால் கம்ரா நிகழ்ச்சி நடத்திய ஹோட்டல் மீது சிவசேனை கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.
மகாராஷ்டிரத்தில் பாஜகவைச் சேர்ந்த முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. துணை முதல்வராக சிவசேனை கட்சியின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே பதவி வகிக்கிறார்.
இந்த நிலையில், ஏக்நாத் ஷிண்டேவை கேலி செய்யும் விதமாக பிரபல நகைச்சுவை பேச்சாளர் குணால் கம்ரா பேசிய நிலையில் அவர் நிகழ்ச்சி நடத்திய ஹோட்டல் மீது சிவசேனை கட்சியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மும்பையின் கார் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அவரது நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. ’நயா பாரத்’ என பெயரிடப்பட்ட அந்த நகைச்சுவை நிகழ்ச்சியில் தற்போதைய அரசியல் குறித்து குணாள் கம்ரா பேசினார். அதில், ஷிண்டே சிவசேனை கட்சியை இரண்டாகப் பிரித்து பாஜகவுடன் கூட்டணி வைத்ததை விமர்சித்த குணாள் கம்ரா, ஷிண்டேவை துரோகி எனக் கூறினார்.
இதையும் படிக்க | புல்லட் ரயில் கட்டுமான தளத்தில் விபத்து: 25 ரயில்கள் ரத்து!
மேலும், ஷிண்டேவை கேலி செய்யும் விதமாக அவரது பெயரைக் குறிப்பிடாமல் அவரது தோற்றத்தை மட்டும் குறிப்பிட்டு ’தானேவிலிருந்து ஒரு தலைவர்’ என்ற பாடலை பாடி அதனை தனது சமூக வலைதளங்களிலும் பகிர்ந்தார் குணாள் கம்ரா.
இதனால், கோபமடைந்த சிவசேனை கட்சித் தொண்டர்கள் நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கம் இருக்கும் ஹோட்டலை சூறையாடினர். அங்கிருந்த பொருள்களை உடைத்து சேதப்படுத்திய நிலையில், குணாள் கம்ராவை கைது செய்யுமாறு போலீஸில் புகாரளித்துள்ளனர்.
குணாள் கம்ராவுக்கு சர்ச்சைகள் புதிதானது அல்ல. அவரது அரசியல் நகைச்சுவை நிகழ்ச்சிகள் தொடர்பாக பலமுறை அரசியல் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பலரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அவருடைய யூடியுப் சேனலில் பல அரசியல் தலைவர்கள், செய்தியாளர்கள் என பலரைப் பற்றி நகைச்சுவையாக அவர் பேசும் விடியோக்கள் உள்ளன. ஆனால் இந்தமுறை அதற்கான எதிர்ப்பு மிகவும் மோசமாக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
”சிவசேனை கட்சியினரின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு என்பது எங்கு இருக்கிறது?” என சிவசேனை (யுபிடி) கட்சித் தலைவர் ஆதித்யா தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜூன் 20-ல் மீண்டும் தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் போராட்டம்!
ஆகாஷின் உடலை காவல்துறை அடக்கம் செய்ய எதிர்ப்பு! பெற்றோர், உறவினர்கள் கைது!

ஜூன் 16-ல் மகாராஷ்டிரத்தில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் மீண்டும் போராட்டம்!

ஜூன் 14-ல் பெங்களூரில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் போராட்டம்!
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



