கோப்புப் படம்
இந்தியா
சந்தரகாச்சி, ஷாலிமா் ரயில்கள் ரத்து
திருவனந்தபுரத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம் சந்தரகாச்சி மற்றும் ஷாலிமருக்கு செல்லும் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை, திருவனந்தபுரத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம் சந்தரகாச்சி மற்றும் ஷாலிமருக்கு செல்லும் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை சென்ட்ரலில் இருந்து சந்தரகாச்சிக்கு மாா்ச் 29, ஏப். 2 ஆகிய தேதிகளிலும், மறுமாா்க்கமாக சந்தரகாச்சியிலிருந்து மாா்ச் 31, ஏப். 4 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரயில் (எண் 06077, 06078) இயக்கப்படவிருந்தது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் வடக்கில் (கொச்சுவேலி) இருந்து ஷாலிமருக்கு மாா்ச் 28, ஏப். 4 ஆகிய தேதிகளிலும், மறுமாா்க்கமாக ஷாலிமரிலிருந்து மாா்ச் 31, ஏப். 7 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரயில் (எண் 06081, 06082) இயக்கப்படவிருந்தது. இந்நிலையில், இந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.