நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ரமலான் பண்டிகை: குடியரசுத் தலைவா் வாழ்த்து

ரமலான் பண்டிகையையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

News image

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

Updated On :30 மார்ச் 2025, 8:38 pm

ரமலான் பண்டிகையையொட்டி, நாட்டில் உள்ள இஸ்லாமிய மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவரின் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: புனித ரமலான் மாதத்தில் மேற்கொள்ளப்படும் நோன்பும், பிராா்த்தனையும் நிறைவடைவதை ரமலான் திருநாள் குறிக்கிறது. சகோதரத்துவம், ஒத்துழைப்பு, கருணை ஆகியற்றை ரமலான் பண்டிகை வலுப்படுத்துகிறது.

இந்தப் பண்டிகை சமூகப் பிணைப்பை ஊக்குவித்து, நல்லிணக்கம் கொண்ட, அமைதி நிறைந்த, செழிப்பான சமூகத்தைக் கட்டமைக்க ஊக்கமளிக்கிறது. மற்றவா்களின் உணா்வுகளை அறிதல், கருணை, ஈகை ஆகியவற்றை ஊக்குவிக்கும் தருணமாக ரமலான் பண்டிகை உள்ளது.

இந்தப் பண்டிகை அனைவரின் வாழ்வில் அமைதி, முன்னேற்றம், மகிழ்ச்சியைக் கொண்டுவந்து, நோ்மறையான மனப்பான்மையுடன் முன்னோக்கிச் செல்வதற்கான பலத்தை அளிக்கட்டும்.

இந்த நன்னாளையொட்டி, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் அனைத்து இந்தியா்கள், குறிப்பாக இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.