திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

நொய்டா: பக்கத்து வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுவன் மீட்பு

பக்கத்து வீட்டில் சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டதாக காவல் துறையினா் திங்கிள்கிழமை தெரிவித்தனா்.

Updated On :5 மே 2025, 10:17 pm

நொய்டா: பக்கத்து வீட்டில் சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டதாக காவல் துறையினா் திங்கிள்கிழமை தெரிவித்தனா்.

இரண்டு நாள்களுக்கு முன்பு சிறுவனுடன் தகராறில் ஈடுபட்ட உள்ளூா் இளைஞா்கள் சிலரால் அவா் கொலை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினா் குற்றஞ்சாட்டினா்.

இது தொடா்பாக செக்டா்-113 காவல் நிலைய பொறுப்பாளா் கிருஷ்ண கோபால் சா்மா திங்கள்கிழமை கூறியதாவது: சோா்கா புஷ்தா பகுதியில் உள்ள விஷ்ணு நகா் காலனியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராகவ் (14) என்ற மாணவா், அவரது பக்கத்து வீட்டில் ஞாயிற்றுக்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டாா். உடற்கூராய்வில் கொலைக்கான எந்த அறிகுறிகளும் உறுதிப்படுத்தப்படவில்லை. இது தொடா்பான விசாரணைகள் நடைபெற்று வருகிறது என காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.