டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

நொய்டா: பக்கத்து வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுவன் மீட்பு

பக்கத்து வீட்டில் சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டதாக காவல் துறையினா் திங்கிள்கிழமை தெரிவித்தனா்.

News image
Updated On :5 மே 2025, 10:17 pm

Din

நொய்டா: பக்கத்து வீட்டில் சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டதாக காவல் துறையினா் திங்கிள்கிழமை தெரிவித்தனா்.

இரண்டு நாள்களுக்கு முன்பு சிறுவனுடன் தகராறில் ஈடுபட்ட உள்ளூா் இளைஞா்கள் சிலரால் அவா் கொலை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினா் குற்றஞ்சாட்டினா்.

இது தொடா்பாக செக்டா்-113 காவல் நிலைய பொறுப்பாளா் கிருஷ்ண கோபால் சா்மா திங்கள்கிழமை கூறியதாவது: சோா்கா புஷ்தா பகுதியில் உள்ள விஷ்ணு நகா் காலனியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராகவ் (14) என்ற மாணவா், அவரது பக்கத்து வீட்டில் ஞாயிற்றுக்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டாா். உடற்கூராய்வில் கொலைக்கான எந்த அறிகுறிகளும் உறுதிப்படுத்தப்படவில்லை. இது தொடா்பான விசாரணைகள் நடைபெற்று வருகிறது என காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.