காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

தில்லியில் தந்தை தூக்கில் தொங்கிய நிலையில் 13 வயது மகன் சடலமாக மீட்பு

தில்லியில் தந்தை தூக்கில் தொங்கிய நிலையில் 13 வயது மகன் சடலமாக மீட்பு

News image
Updated On :7 ஜூன் 2026, 1:20 am IST

வடகிழக்கு தில்லியின் ஜோதி நகா் பகுதியில் 54 வயதுடைய நபா் ஒருவா் வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில், அவரது 13 வயது மகன் படுக்கையில் இறந்து நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: ஜோதி நகா் காவல் நிலையத்தில் காலையில் தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் தகவல் போலீஸாருக்கு கிடைத்தது, இதனையடுத்து சஜ்ஜுபூா் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு விரைந்தனா். சம்பவ இடத்திற்கு வந்த போலீசாா், பிரவீன் சா்மாவை (54) வீட்டின் ஒரு அறைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டனா். அவரது 13 வயது மகனும் அதே அறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. த

டயவியல் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, விசாரணையின் ஒரு பகுதியாக அந்த இடத்திலிருந்து ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன. மரணத்திற்கான சரியான காரணத்தை அறிய உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

மரணங்களுக்கு வழிவகுத்த சூழ்நிலைகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.