பஞ்சாபில் அடுத்த 3 நாள்களுக்கு அனைத்துக் கல்வி நிலையங்களும் மூடல்!

பஞ்சாபில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களையும் அடுத்த 3 நாள்களுக்கு மூடுவதற்கு பஞ்சாப் அரசாங்கம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபில் அடுத்த 3 நாள்களுக்கு அனைத்துக் கல்வி நிலையங்களும் மூடல்!
Published on
Updated on
1 min read

பஞ்சாபில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களையும் அடுத்த 3 நாள்களுக்கு மூடுவதற்கு பஞ்சாப் அரசாங்கம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் வெடித்துள்ளதைத் தொடர்ந்து, எல்லையோர மாநிலங்கள் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறன்றன.

அதன் ஒரு பகுதியாக பஞ்சாபில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களும் அடுத்த மூன்று நாள்களுக்கு மூடப்படுவதாகவும், அனைத்து காவல் அதிகாரிகளுக்குமான விடுமுறை ரத்து செய்யப்படுவதாகவும் பஞ்சாப் மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.

கல்வி நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், பஞ்சாப் பல்கலைக்கழகங்களில் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் வசதிக்காக கட்டுப்பாட்டு அறைகளையும் பஞ்சாப் அரசு அமைத்துள்ளது. அனைத்து அரசு அதிகாரிகளுக்குமான விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுடன் பஞ்சாப் மாநிலம் 532 கிலோமீட்டர் எல்லையைப் பகிர்ந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com