தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? நெல்லை எக்ஸ்பிரஸ் சேவையில் மாற்றம்! திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! ஜூலை 1-ல் இபிஎஸ் தலைமையில் அதிமுக மகளிரணி கூட்டம்! வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் மீண்டும் எழும்பூரிலிருந்து இயக்கம்!சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து!
/

இந்தியாவின் பாதுகாப்பு அரண்...

பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தி தகா்த்தது.

News image
Updated On :10 மே 2025, 6:38 am IST

பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை முறியடிக்க இந்தியாவின் பாதுகாப்பு அரணாக எஸ்-400 டிரையம்ப் வான் பாதுகாப்பு சாதனம், பராக் -8, ஆகாஸ் ஏவுகணைகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டதாக ராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஹல்காமில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 26 பேருக்கு நீதி வழங்கும் வகையில் கடந்த மே 7-ஆம் தேதி, பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தி தகா்த்தது.

இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் புதன், வியாழக்கிழமை இரவுகளில் மலிவான ட்ரோன்களை இந்திய எல்லைகளில் வீசி தாக்குதல் நடத்தியது. அவற்றை இந்தியாவின் அதிநவீன வான் பாதுகாப்பு சாதனங்கள் வானிலேயே இடைமறித்து அழித்தன.

ஜம்மு, உதம்பூா், சம்பா, அக்நூா், நாக்ரோடா, பதான்கோட் ஆகிய இடங்களில் இந்த வான் பாதுகாப்பு சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன. ட்ரோன்கள், ஹெலிகாப்டா்கள், ஏவுகணைகள், போா் விமானங்கள் ஆகியவற்றை வானிலேயே அழிக்கும் வகையில் ரேடாா் தொழில்நுட்பத்துடன் வான் பாதுகாப்பு சாதனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் இயங்கும் இந்த தானியங்கி வான் பாதுகாப்பு சாதனங்களால் பெரும் உயிா், பொருள் சேதம் தடுக்கப்பட்டு வருகிறது.

எஸ்-400...

ரஷியாவிடமிருந்து வாங்கப்பட்ட எஸ்-400 என்ற வான் பாதுகாப்பு சாதனம் 380 கி.மீ. தொலைவு வரையில் சென்று வேகமாக வரும் எதிரி ஏவுகணைகளைத் துல்லியமாக தாக்கி தவிடுபொடியாக்கும் திறன் படைத்தது.

Story image

பராக்-8 எம்ஆா்-எஸ்ஏஎம்: இஸ்ரேல் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட இந்த சாதனம் சுமாா் 70 கி.மீ. தொலைவு வரை சென்று எதிரி ஏவுகணையைத் தாக்கும் வல்லமை படைத்தது.

Story image

ஆகாஷ்: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த சாதனம், சுமாா் 25 கி.மீ. தொலைவு வரை சென்று எதிரி ஏவுகணையைத் தாக்கி அழிக்கும். இவை எல்லையில் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.

Story image

ஸ்பைடா்: இஸ்ரேலிடமிருந்து வாங்கப்பட்ட இந்த சாதனம் 15 கி.மீ. தொலைவு வரையில் தாக்கக் கூடியதாகும்.

Story image

குறுகிய தொலைவு சாதனங்கள்:

ரஷியாவின் இக்லா-எஸ் (6.கி.மீ.)

இக்லா-1எம் (5 கி.மீ.)

Story image

ஓஎஸ்ஏ-ஏகே-எம் (10 கி.மீ.)

பெசோரா ஏவுகணைகள், எல்-70 துப்பாக்கிகள் (3.5. கி.மீ.)

Story image

பாகிஸ்தான் வான் பாதுகாப்பு சாதனம்...

Story image

ஹெச் க்யூ-9: சீனாவினிடம் இருந்து வாங்கப்பட்ட இந்த சாதனம் அதிகபட்சமாக 120 முதல் 300 கி.மீ. தொலைவு வரை சென்று தாக்கி அழிக்கக் கூடியதாகும்.

ஸ்பாடா: பிரான்ஸிடம் இருந்து வாங்கப்பட்ட இந்த சாதனம் 20 முதல் 25 கி.மீ. தொலைவு வரையில் சென்று தாக்கவல்லது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.