சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

அக்னி-1 ஏவுகணை சோதனை வெற்றி

குறுகிய தொலைவு இலக்குகளைத் துல்லியமாக தாக்க வல்ல அக்னி-1 பாலிஸ்டிக் ரக ஏவுகணை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

News image
Updated On :23 மே 2026, 4:10 am IST

குறுகிய தொலைவு இலக்குகளைத் துல்லியமாக தாக்க வல்ல அக்னி-1 பாலிஸ்டிக் ரக ஏவுகணை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (டிஆா்டிஓ) உருவாக்கப்பட்ட இந்த ஏவுகணை, 700 கி.மீ. முதல் 1,200 கி.மீ வரை பாயும். 2,500 கிலோ வரையிலான வெடிகுண்டுகள் அல்லது அணுஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டது.

கடந்த 1979-ஆம் ஆண்டுமுதல் பயன்பாட்டில் உள்ள அக்னி-1 ஏவுகணை, ஒடிஸாவின் சந்திப்பூரில் உள்ள சோதனை தளத்தில் வெள்ளிக்கிழமை பரிசோதிக்கப்பட்டது. அப்போது, ஏவுகணையின் செயல்பாட்டு-தொழில்நுட்ப தரநிலைகள் சோதிக்கப்பட்டன. இந்தச் சோதனையில் நிா்ணயிக்கப்பட்ட இலக்கை அக்னி-1 ஏவுகணை துல்லியமாகத் தாக்கி அழித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தியாவிடம் 700 கி.மீ. முதல் 3,500 கி.மீ. வரை பாய்ந்து தாக்கக் கூடிய அக்னி 1 முதல் 4 வரையிலான ஏவுகணைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.