கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மூடப்பட்ட விமான நிலையங்கள் மீண்டும் திறப்பு

மூடப்பட்டிருந்த 32 விமான நிலையங்களும் திறப்பு

News image

விமான நிலையங்கள்..

Updated On :12 மே 2025, 6:35 pm

DIN

இந்தியா-பாகிஸ்தான் போர்ப் பதற்றம் காரணமாக மூடப்பட்டிருந்த 32 விமான நிலையங்களும் திறக்கப்பட்டது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதற்குப் பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன் மற்றும் ஏவுகணை கொண்டு பதில் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இந்தியா தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தி அவற்றை முறியடித்தது.

இந்தியத் தாக்குதலில் நிலைகுலைந்த பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்துமாறு சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டிய நிலையில் மே 10-ம் தேதி மாலை 5 மணி முதல் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில், போர்ப் பதற்றம் காரணமாக இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் உள்ள 32 விமான நிலையங்களில் விமான சேவைகள் மே 15 வரை நிறுத்தப்பட்டது. இரு நாடுகளுக்கிடையேயான போர்ப் பதற்றம் தற்போது முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து மூடப்பட்ட 32 விமான நிலையங்களையும் மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

விமான நிலையங்களின் செயல்பாடுகள் மீண்டும் தொடங்குவது குறித்த முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.