இந்தியாதான் சிறந்த நிதி மேலாளராகத் திகழ்வதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உலகளாவிய வர்த்தகத்தின் நிச்சயமற்ற தன்மைகளுக்கிடையே, இந்தியாவைத்தான் ஒரு நிலையான மற்றும் நம்பிக்கைக்குரிய சந்தையாக முதலீட்டாளர்கள் கூறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில், ஆசியாவிலேயே நிதி மேலாண்மையில் (Fund Managers) இந்தியாதான் அதிகளவில் தேர்வு செய்யப்படுவதாகவும் ஆய்வு கூறுகிறது. சிறந்த நிதி மேலாளராகக் காணும்போது, ஜப்பான் நாட்டைவிடவும் இந்தியா விஞ்சிவிட்டதாக போஃபா செக்யூரிட்டீஸ் (BofA Securities) ஆய்வு கூறுகிறது.
மேலும், இந்தியாவுக்கு 42 சதவிகிதம் ஆதரவு கிடைக்கப் பெற்றது. ஜப்பானுக்கு 39 சதவிகிதத்தினரும், சீனா வெறும் 6 சதவிகிதம் மட்டுமே பெற்றது. சுமார் 234 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துகளை நிர்வகிக்கும் நிதி மேலாளர்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.
வரி மற்றும் வர்த்தகப் பதற்றக் காலங்களிலும் ஏற்படும் உலகளாவிய விநியோகச் சங்கிலியின் மறுசீரமைப்புகளிலிருந்து இந்தியா பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுவதால்தான், இந்தியா சிறந்த தேர்வாக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.
ஏப்ரல் 2 ஆம் தேதிமுதல், மற்ற ஆசிய நாடுகளைவிடவும் இந்திய பங்குச்சந்தை சிறந்த செயல்திறனைக் கொண்டுள்ளது. பாகிஸ்தானுடன் போர்ப் பதற்றத்தின்போது, தற்காலிக வீழ்ச்சியைக் கண்டாலும், திடமான செயல்திறனைக் கொண்டுள்ளது.
சிறந்த பணப்புழக்கம், வரி, கிராமப்புறங்களின் தேவை ஆகியவற்றின் மூலம் இந்தாண்டு இறுதிக்குள், இந்திய நிறுவனங்களின் லாபத்தில் மேலும் 7.6 சதவிகிதம் வளர்ச்சியடையக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடி மாவட்ட வளா்ச்சிப் பணிகளுக்கு என்எல்சி நிறுவனம் ரூ.3.65 கோடி ஒதுக்கீடு

அல்லி நகரத்து மண்வாசனை...
தமிழகத்துக்கு ரூ.1,000 கோடி பேரிடா் நிதியை ஒதுக்கியது மத்திய அரசு: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

கரோனாவுக்கு பிறகு வலுவடைந்த தமிழக அவசர சுகாதார அமைப்பு: சென்னை ஐஐடி ஆய்வில் தகவல்
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



