மும்பையில் கொட்டித் தீர்த்த கோடைமழை.. வெப்பம் தணிந்தது!
மும்பையில் கொட்டித் தீர்த்த கோடைமழை காரணமாக வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி


மும்பை: மும்பையின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் கோடை மழை கொட்டித் தீர்த்தது. இத்தனை நாள் வாட்டி வந்த வெப்பம் தணிந்துள்ளது. மும்பை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இன்று நாள் முழுக்க மும்பை நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் லேசான தூறல் இருந்துகொண்டே இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு சில நாள்களாகவே மும்பையின் பல பகுதிகளில் தொடர்ந்துமழை பெய்து வந்துள்ளது. அதுபோல இன்றும் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல், நாடு முழுவதும் அடுத்த ஐந்து நாள்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி அகில் ஸ்ரீவத்சவா கூறுகையில், தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளம், கர்நாடக மாநிலங்களில் இடியுடன் பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும்,சூறாவளி காற்று வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.
இதே வானிலை, மத்திய இந்திய மாநிலங்களுக்கும் ஓரிரு நாள்களில் மாறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...