அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

ஆண்டுக்கு 7.5 லட்சம் வாகனங்களைத் தயாரிக்க இலக்கு: சுசூகி மோட்டார்சைக்கிள்

இந்தியாவில் ஆண்டுக்கு 7.5 லட்சம் இருசக்கர வாகனங்களைத் தயாரிக்க சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் இலக்கு.

News image

சுசூகி மோட்டார்சைக்கிள் - கோப்புப் படம்

Updated On :21 மே 2025, 5:01 pm IST

இந்தியாவில் ஆண்டுக்கு 7.5 லட்சம் இருசக்கர வாகனங்களைத் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹரியாணா மாநிலம் கார்கோடா பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் புதிய ஆலையைக் கட்டும் பணியை சுசூகி மோட்டார்சைக்கிள் தொடங்கியுள்ளது. இந்தப் பணிகள் முடிவடைந்து 2027ஆம் ஆண்டில் ஆலையில் தயாரிப்புப் பணிகள் தொடங்கப்படும் என்றும், இதற்காக ரூ. 1200 கோடி முதலீடு செய்யப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜப்பானைச் சேர்ந்த சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம், இந்தியாவில் இரண்டாவது ஆலையைத் தொடங்குவதற்கானப் பணிகளை மேற்கொண்டுள்ளது.

இதில் முதல் 25 ஏக்கர் பரப்பளவில் ஆரம்பகட்ட உற்பத்திக்கும், மற்றோரு 25 ஏக்கர், பசுமையான இடமாக வைத்துக்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

2027ஆம் ஆண்டில் ஆலை முழுமையாகச் செயல்பாட்டிற்கு வரும் என்றும் ஆண்டுக்கு 7.5 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய முதற்கட்டமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஹரியாணாவின் குருகிராம் பகுதியில் 2006ஆம் ஆண்டு முதல் சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுக்கு 5.4 லட்சம் வாகனங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.