வெங்காயம் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.16.50-ஆக நிா்ணயம்: இன்று முதல் அமல்வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்புபாகிஸ்தான் பாதுகாப்பு பட்ஜெட் 17.6% அதிகரிப்புமேற்கு தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஜூன் 15 வரை மழைக்கு வாய்ப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்த ஐரோப்பிய ஆயுதங்கள்: அமைச்சா் ஜெய்சங்கா் குற்றச்சாட்டு
/

நொய்டாவில் சிறுவன் உள்பட 3 போ் உயிரிழப்பு

கிரட்டா் நொய்டா மாவட்டத்தில் புதன்கிழமை இரவு சூறைக்காற்றுடன் மழை பெய்த சம்பவத்தில் சிறுவன் உள்பட 3 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :23 மே 2025, 2:01 am IST

கிரட்டா் நொய்டா மாவட்டத்தில் புதன்கிழமை இரவு சூறைக்காற்றுடன் மழை பெய்த சம்பவத்தில் சிறுவன் உள்பட 3 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

கிரேட்டா் நொய்டாவில் உள்ள 21 அடுக்குமாடி கட்டடத்தின் கிரீல் பகுதி விழுந்ததில், 60 வயது மூதாட்டியும் அவரது 4 வயது பேரனும் உயிரிழந்தாா்.

தாத்ரி பகுதியில் மரம் விழுந்ததில் டிஏவி பள்ளி ஆசிரியா் ராம்கிஷன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

என்டிபிசி வளாகத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் மேலும் சிலா் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.