எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நான் சிப்ஸ் பாக்கெட் திருடவில்லை.. 13 வயது சிறுவனின் தற்கொலை கடிதம்

நான் சிப்ஸ் பாக்கெட் திருடவில்லை என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு 13 வயது சிறுவன் தற்கொலை

News image
தற்கொலைக் கடிதம்
Updated On :23 மே 2025, 7:55 am

DIN

பன்ஸ்குரா: மேற்கு வங்க மாநிலம் பன்ஸ்குரா பகுதியைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவர், அம்மா நான் சிப்ஸ் பாக்கெட்டை திருடவில்லை என்று எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பகுல்தா உயர்நிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்புப் படித்து வந்த கிருஷ்னெண்டு (13), அங்கிருந்த ஒரு இனிப்பகத்தில் மூன்று சிப்ஸ் பாக்கெட்டுகளை திருடியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கடையில் ஆள் இல்லாதபோது சிப்ஸ் பாக்கெட்டுகளை சிறுவன் திருடிச் சென்றதாக, கடையின் உரிமையாளர் குற்றம்சாட்டி, சிறுவனைப் பிடித்து வந்து ரூ.20 பெற்றுக் கொண்டுள்ளார். மக்கள் முன்னிலையில் சிப்ஸ் பாக்கெட் திருட மாட்டேன் என்று கூறி மன்னிப்புக் கேட்குமாறு வலியுறுத்தியிருக்கிறார். கடையிலிருந்து சிறுவனை அழைத்துச் சென்ற அவரது தாய், வீட்டுக்குச் சென்று கடுமையாக திட்டியிருக்கிறார்.

இதையடுத்து வீட்டில் ஆள் இல்லாதபோது கிருஷ்ணென்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடைக்காரர், சிறுவனை திருடன் என்று குற்றம்சாட்டியதே தற்கொலைக்குக் காரணம் என்று உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். காவல்துறையினருக்கு இதுவரை குடும்பத்தினர் புகார் எதுவும் கொடுக்காத நிலையில், கடைக்காரர் தலைமறைவாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்கொலை செய்துகொண்ட சிறுவன், கடைசியாக எழுதியக் கடிதத்தில், அம்மா நான் சிப்ஸ் பாக்கெட்டுகளை திருடவில்லை என்று எழுதியிருப்பது, பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.