திருச்சூரில் பலத்த காற்றுக்கு பெரிய இரும்பு கூரை ஒன்று பறந்து சாலையில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், திருச்சூர் நகரில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது கட்டடம் ஒன்றில் இருந்து பெயர்ந்த பெரிய அளவிலான இரும்பு கூரை பறந்து சாலையின் குறுக்கே விழுந்தது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
நிகழ்விடத்துக்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் கூரையை அகற்றி சாலையை சுத்தம் செய்யும் பணியைத் தொடங்கினர்.
இரும்பு கூரையின் அளவு மற்றும் எடை காரணமாக அகற்றுவதற்கு நேரம் எடுக்கும் என்று தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மழை காரணமாக அந்த நேரத்தில் சாலை பெரும்பாலும் காலியாக இருந்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்று உள்ளூர்வாசிகள் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாலையில் முறிந்து விழுந்த மரம்

திருப்பத்தூரில் பலத்த காற்று

ஸ்ரீவில்லிபுத்தூா் செண்பகப் தோப்பு சாலையில் முறிந்து விழுந்த மரக் கிளைகளை அகற்ற வலியுறுத்தல்

ஏலகிரியில் பலத்த மழை: சாலையில் சாய்ந்த மரங்கள் அகற்றம்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



