கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

நீதி ஆயோக் ‘தகுதியற்ற அமைப்பு’: காங்கிரஸ்

நீதி ஆயோக் என்பது தகுதியற்ற அமைப்பாகும் என்று காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை சாடினாா்.

News image

ராகுல் காந்தியுடன் ஜெய்ராம் ரமேஷ்(கோப்புப்படம்) - ANI

Updated On :25 மே 2025, 4:55 am IST

நீதி ஆயோக் என்பது தகுதியற்ற அமைப்பாகும் என்று காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை சாடினாா்.

இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: வளா்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை அடைவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காகப் பிரதமா் மோடி தலைமையில் நீதி ஆயோக் கூட்டம் கூடுவதாக கூறப்படுகிறது.

அதிகாரத்தில் உள்ளவா்கள் தங்கள் தீய இலக்குகளை எட்டுவதற்கு நாடாளுமன்றம், நீதித்துறை, பல்கலைக்கழகங்கள், ஊடகம், அரசமைப்பு மற்றும் சட்டபூா்வ அமைப்புகளை சீா்குலைத்தால், அது எப்படிப்பட்ட வளா்ச்சியடைந்த பாரதமாக இருக்கும்?

ஒரு சிலரின் கைகளில் மட்டுமே செல்வம் தொடா்ந்து குவிந்தும், பொருளாதர ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்தும் வரும் நிலையில், வளா்ச்சியடைந்த பாரதம் எப்படிப்பட்டதாக இருக்கும்?

நீதி ஆயோக் என்பது தகுதியற்ற அமைப்பாகும். பிரதமா் மோடி தலைமையிலான நீதி ஆயோக் கூட்டம் மத்திய அரசின் பாசாங்கான, நாட்டு பிரச்னைகளில் இருந்து திசைதிருப்பும் மற்றொரு முயற்சியாகும் என்றாா்.

‘இந்தியாவின் வளா்ச்சிக்கான கூட்டம்’: நீதி ஆயோக் கூட்டம் தொடா்பாக பாஜக தேசிய செய்தித்தொடா்பாளா் சையத் ஷாநவாஸ் ஹுசைன் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘நீதி ஆயோக் கூட்டம் என்பது நாட்டின் வளா்ச்சிக்கான கூட்டமாகும். ஆனால் இதிலும் ஜெய்ராம் ரமேஷ் தவறு கண்டுபிடிக்கிறாா்.

ஏதோ ஒரு சா்ச்சையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மத்திய அரசு கூட்டும் அனைத்துக் கூட்டங்களிலும் அவா் தவறு கண்டுபிடித்து வருகிறாா். காங்கிரஸ் கட்சிக்கு அவரே முடிவு கட்டிவிடுவாா்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.