ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

மே 26ல் குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி: பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்!

மே 26, 27ல் குஜராத் செல்லவுள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி. - PTI

Published On :

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக மே 26, 27ல் குஜராத் மாநிலத்துக்குச் செல்லவுள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி..

பிரதமர் மோடி குஜராத்துக்கு வருகிற 26,27 ஆகிய இரண்டு நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். காந்தி நகரின் மகாத்மா மந்திரில் நடைபெறும் நகர்ப்புற மேம்பாட்டு ஆண்டுக்கான அர்ப்பணிப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பிரதமர் மோடியின் வருகை மாநில மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரை வரவேற்க மக்கள் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் மோடியின் வருகையைத் தொடர்ந்து மாநிலத்தில் ரூ.82,500 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கிவைத்து அடிக்கல் நாட்ட உள்ளார்.

பூஜ் நகரில் ரூ. 53,414 கோடி மதிப்பிலான 33 மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். மேலும் குஜராத் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் பயணடையும் வகையில், ஆஷாபுரா ஆன்மிக மையத்தில் வளர்ச்சி பணிகளையும் தொடங்கிவைக்க உள்ளார்.

கட் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஆன்மிக மையத்தின் வளாகம் ரூ.32.71 கோடி மதிப்பில் புதுப்பித்தல் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகளை மாநில அரசு மற்றும் குஜராத் பவித்ர யாத்ராதம் விகாஸ் வாரியம் இணைந்து மேற்கொண்டது. இது தற்போது நிறைவடைந்துள்ளது. ஆஷாபுரா மாதா கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கான மேம்பட்ட வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.