மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பெங்களூரு: கரோனா தொற்று பாதித்தவர் உயிரிழப்பு? மருத்துவர்கள் மறுப்பு!

பெங்களூரில் கரோனா தொற்று பாதித்தவர் உயிரிழந்ததாகப் பரவிய வதந்திக்கு மருத்துவர்கள் மறுப்பு

News image

பிரதிப் படம் - ENS

Updated On :25 மே 2025, 3:00 am

பெங்களூரில் கரோனா தொற்று பாதித்தவர் உயிரிழந்ததாகப் பரவிய வதந்திக்கு மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

பெங்களூரில் 84 வயதான முதியவர் ஒருவர், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மே 13 ஆம் தேதியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு நுரையீரல் பிரச்னை மட்டுமின்றி, பல்வேறு உறுப்புகளும் செயலிழந்திருந்தன.

இதனிடையே, மே 17 ஆம் தேதியில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவச் சோதனையில், அவருக்கு கரோனா தொற்றும் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அவர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். இந்த நிலையில், அவர் கரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. இருப்பினும், அவரின் உறுப்புகள் செயலிழப்பின் காரணமாகவும், மோசமான உடல்நிலையாலும்தான் உயிரிழந்தார் என்று மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா தொற்று மீண்டும் பரவுவதாக சமீபகாலமாக செய்திகள் பரவி வருவதே, இந்த சந்தேகத்துக்கான காரணம் என்று மருத்துவர்கள் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.