கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

வங்கிகளில் ரூ. 36,014 கோடி மோசடி! முந்தைய ஆண்டைவிட 3 மடங்கு அதிகம்!

இந்திய வங்கிகளில் 2024 - 2025 நிதியாண்டில் நடந்த மோசடிகள் குறித்த ரிசர்வ் வங்கியின் தகவல்

News image
Updated On :29 மே 2025, 4:04 pm

DIN

இந்திய வங்கிகளில் 2024 - 2025 நிதியாண்டில் நடந்த மோசடிகள் குறித்து ரிசர்வ் வங்கியின் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் நடைபெற்ற மோசடிகள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி தெரிவித்ததாவது, 2024 - 25 நிதியாண்டில் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் மொத்தம் 23,953 மோசடி சம்பவங்கள் நடந்துள்ளன. 2023 - 24 ஆண்டில் 36,060 ஆக இருந்த நிலையில், தற்போது மோசடி எண்ணிக்கை குறைந்துள்ளது.

இருப்பினும், மோசடி செய்யப்பட்ட மதிப்பு, முந்தைய ஆண்டைவிட கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகமாகும். 2023 - 24 நிதியாண்டில் வங்கிகளில் மோசடி மதிப்பு ரூ. 12,230 கோடியாக இருந்த நிலையில், 2024 -25 நிதியாண்டில் ரூ. 36,014 கோடியாக அதிகரித்துள்ளது.

23,953 வங்கிகளில் தனியார் வங்கிகளில் 14,233 மோசடிகளும், பொதுத்துறை வங்கிகளில் 6,935 மோசடிகளும் நடந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.