வங்கிகளில் ரூ. 36,014 கோடி மோசடி! முந்தைய ஆண்டைவிட 3 மடங்கு அதிகம்!

இந்திய வங்கிகளில் 2024 - 2025 நிதியாண்டில் நடந்த மோசடிகள் குறித்த ரிசர்வ் வங்கியின் தகவல்
வங்கிகளில் ரூ. 36,014 கோடி மோசடி! முந்தைய ஆண்டைவிட 3 மடங்கு அதிகம்!
Published on
Updated on
1 min read

இந்திய வங்கிகளில் 2024 - 2025 நிதியாண்டில் நடந்த மோசடிகள் குறித்து ரிசர்வ் வங்கியின் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் நடைபெற்ற மோசடிகள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி தெரிவித்ததாவது, 2024 - 25 நிதியாண்டில் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் மொத்தம் 23,953 மோசடி சம்பவங்கள் நடந்துள்ளன. 2023 - 24 ஆண்டில் 36,060 ஆக இருந்த நிலையில், தற்போது மோசடி எண்ணிக்கை குறைந்துள்ளது.

இருப்பினும், மோசடி செய்யப்பட்ட மதிப்பு, முந்தைய ஆண்டைவிட கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகமாகும். 2023 - 24 நிதியாண்டில் வங்கிகளில் மோசடி மதிப்பு ரூ. 12,230 கோடியாக இருந்த நிலையில், 2024 -25 நிதியாண்டில் ரூ. 36,014 கோடியாக அதிகரித்துள்ளது.

23,953 வங்கிகளில் தனியார் வங்கிகளில் 14,233 மோசடிகளும், பொதுத்துறை வங்கிகளில் 6,935 மோசடிகளும் நடந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com