தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வங்கிகளில் ரூ. 36,014 கோடி மோசடி! முந்தைய ஆண்டைவிட 3 மடங்கு அதிகம்!

இந்திய வங்கிகளில் 2024 - 2025 நிதியாண்டில் நடந்த மோசடிகள் குறித்த ரிசர்வ் வங்கியின் தகவல்

News image
Updated On :29 மே 2025, 4:04 pm

DIN

இந்திய வங்கிகளில் 2024 - 2025 நிதியாண்டில் நடந்த மோசடிகள் குறித்து ரிசர்வ் வங்கியின் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் நடைபெற்ற மோசடிகள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி தெரிவித்ததாவது, 2024 - 25 நிதியாண்டில் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் மொத்தம் 23,953 மோசடி சம்பவங்கள் நடந்துள்ளன. 2023 - 24 ஆண்டில் 36,060 ஆக இருந்த நிலையில், தற்போது மோசடி எண்ணிக்கை குறைந்துள்ளது.

இருப்பினும், மோசடி செய்யப்பட்ட மதிப்பு, முந்தைய ஆண்டைவிட கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகமாகும். 2023 - 24 நிதியாண்டில் வங்கிகளில் மோசடி மதிப்பு ரூ. 12,230 கோடியாக இருந்த நிலையில், 2024 -25 நிதியாண்டில் ரூ. 36,014 கோடியாக அதிகரித்துள்ளது.

23,953 வங்கிகளில் தனியார் வங்கிகளில் 14,233 மோசடிகளும், பொதுத்துறை வங்கிகளில் 6,935 மோசடிகளும் நடந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.