தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

மேற்கு வங்கத்தில் தொடரும் கனமழை! மீனவர்களுக்கு எச்சரிக்கை!

மேற்கு வங்கத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :29 மே 2025, 5:50 pm IST

மேற்கு வங்கத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலத்தின் விளைவாக, மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தா உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று (மே 29) கனமழை பெய்து வருகின்றது.

இதனைத் தொடர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை அதிகரிக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், வடக்கு மற்றும் தெற்கு 24 பார்கானாஸ், நதியா, முர்ஷிதாபாத், புர்பா, பாஸ்சிம் பர்தாமன் மற்றும் பிர்பம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மணிக்கு 45-55 கி.மீ. வேகத்தில் சூராவளி காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாநில தலைநகர் கொல்கத்தாவில் இன்று காலை 0.1 மி.மீ. அளவுக்கு மழை பெய்தது பதிவாகியுள்ளது. மேலும், அடுத்த 48 மணிநேரத்துக்கு அம்மாநில மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், மேற்கு வங்க அரசு கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கடலோர மாவட்டங்களில், தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்ததுடன், பேரிடர் மேலாண்மை அதிகாரிகளை பணியமர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.