ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

வீட்டிலிருந்தே ஆதார் அட்டையில் செல்போன் எண்ணை மாற்றலாம்! எப்படி?

வீட்டிலிருந்தே ஆதார் அட்டையில் செல்போன் எண்ணை மாற்றும் புதிய வசதி விரைவில் வரவிருக்கிறது.

News image

ஆதார் அட்டை

Updated On :29 நவம்பர் 2025, 3:20 pm IST

ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு வசதியை ஆதார் ஆணையம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அது விரைவில் பயன்பாட்டுக்கும் வரவிருக்கிறது.

அதுதான், ஆதார் சேவை மையங்களுக்குச் செல்லாமல், வீட்டிலிருந்தபடியே, ஆதார் அட்டையில் இணைக்கப்பட்டிருக்கும் செல்போன் எண்ணை, பயனர்கள் மாற்றிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு.

ஆதார் ஆணையம், அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. அதில், ஆதார் சேவை மையங்களுக்குச் சென்று நீண்ட வரிசையில் காத்திராமல், ஒருவர் வீட்டிலிருந்தே, செல்போன் எண்ணை ஓடிபி மற்றும் முக அடையாளச் சான்று மூலம் மாற்றிக் கொள்ளும் வசதி விரைவில் வரவிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களும், இந்த புதிய வசதியை பரிசோதனை முறையில் பயன்படுத்திப் பார்த்து எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த கருத்துகளை மின்னஞ்சல் வாயிலாக பகிரவும் ஆதார் ஆணையம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

பொதுவாக, ஆதார் சேவை மையத்தில் மக்கள் அதிகம் வருவது செல்போன் எண் மாற்றம் செய்வதற்காகத்தான். இதற்கு, செல்போன் எண்ணை மாற்றும் நபர் நேரில் வர வேண்டும்.

எனவே, ஆதார் ஆணையம், செல்போன் எண்ணை வீட்டிலிருந்தே மாற்றும் வசதியை ஏற்படுத்த முடிவு செய்து, பரிசோதனை முறையில் உள்ளது.

இதன் மூலம் ஆதார் சேவை மையங்களில் மிகப்பெரிய அளவில் கூட்டம் குறையும் என்றும், இதனால், முக்கிய மாற்றங்களுக்காக வருவோருக்கு வரிசையில் நிற்கும் நேரம் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைக்கு, ஆதார் பயனர்கள், தங்களது முகவரியை மட்டுமே ஆன்லைன் மூலம் மாற்றிக் கொள்ளலாம். தற்போது, ஆதார் ஆணையம் உருவாக்கி வரும் செயலி மூலம், ஒருவர் தங்களது செல்போனில் ஆதார் செயலியை பதிவிறக்கம் செய்து அதிலிருந்த பல முக்கிய விவரங்களை திருத்தம் செய்து கொள்ளலாம். அந்த செயலி முக அடையாளத்தை உறுதி செய்யும் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

A new facility to change the mobile phone number on the Aadhaar card from home is coming soon.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.