தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

எஸ்ஐஆர்! மே.வங்கத்தின் வாக்காளர் பட்டியலில் 30 லட்சம் பெயர்கள் நீக்கம்!

மேற்கு வங்கத்தின் வாக்காளர் பட்டியலில் இருந்து 30 லட்சம் பெயர்கள் நீக்கப்படுவது குறித்து...

News image

இந்தியத் தேர்தல் ஆணையம் (கோப்புப் படம்)

Updated On :29 நவம்பர் 2025, 7:20 am

இணையதளச் செய்திப் பிரிவு

மேற்கு வங்கத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 30 லட்சம் பெயர்கள் நீக்கப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகின்றன. இதில், மேற்கு வங்க மாநிலத்தின் வாக்காளர் பட்டியல்களில் இருந்து சுமார் 30 லட்சம் பெயர்கள் நீக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, நீக்கப்படவுள்ள 30 லட்சம் வாக்காளர்களில் சுமார் 16 லட்சம் வாக்காளர்கள் ஏற்கெனவே மரணமடைந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இத்துடன், போலியான வாக்காளர்கள், பிற மாநிலங்களுக்கு நிரந்தரமாகக் குடியேறியவர்கள் மற்றும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத வாக்காளர்களின் பெயர்களும் பட்டியலில் இருந்து நீக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதுவரை பூர்த்தி செய்யப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்ட படிவங்களின் சதவிகிதத்தின் அடிப்படையில் மட்டுமே இந்த எண்ணிக்கையானது கூறப்படுவதாகவும், இந்தப் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்தவுடன் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் மேற்கு வங்கத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இத்துடன், கடந்த நவ.28 ஆம் தேதி மாலை நிலவரத்தின்படி சுமார் 6.73 கோடி வாக்காளர்களின் படிவங்கள் டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இது, மேற்கு வங்கத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையில் 88 சதவிகிதம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதையடுத்து, மேற்கு வங்கத்தின் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்களின் இறுதி எண்ணிக்கை வரும் டிச.9 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Summary

The ECI announced that around 30 lakh names will be removed from the voter list in Bengal through the SIR.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.