ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

இங்கிலாந்தில் இந்திய மாணவர் கத்தியால் குத்திக் கொலை

இங்கிலாந்தில் உயர்கல்வி படிக்க சென்ற இந்திய மாணவர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

News image
கோப்புப்படம்.
Updated On :30 நவம்பர் 2025, 10:25 am

இணையதளச் செய்திப் பிரிவு

இங்கிலாந்தில் உயர்கல்வி படிக்க சென்ற இந்திய மாணவர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஹரியாணா மாநிலம், சார்கி தாத்ரியைச் சேர்ந்தவர் விஜய் குமார்(30). உயர்கல்வி படிப்பிற்காக மத்திய கலால் மற்றும் சுங்க வாரிய பணியை துறந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்து சென்றிருந்தார்.

தொடர்ந்து, பிரிஸ்டலில் உள்ள மேற்கு இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் அவர் படித்து வந்தார்.

இந்த நிலையில் விஜய் குமார் நவம்பர் 15 ஆம் தேதி வொர்செஸ்டரில் உள்ள பார்போர்ன் சாலையில் பலத்த காயங்களுடன் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டார்.

பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.

அவரை சனிக்கிழமை இரவு மர்ம நபர்கள் யாரோ கத்தியால் குத்தியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளனர்.

இதனிடையே விஜய்யின் உடலை விரைவில் இந்தியா கொண்டு வர உதவ வேண்டும் என வெளியுறவு அமைச்சகத்திடம் குடும்பத்தினர் கோரியுள்ளனர்.

summary

Vijay Kumar, an Indian student from Haryana's Charkhi Dadri studying in the UK, was fatally stabbed in Worcester city centre.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.