மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஹரியாணா ஐஜி பூரண் குமாரின் மனைவி, அவரது சகோதரர் மீது வழக்கு!

பூரண் குமாரின் மனைவி, அவரது சகோதரர் மீது வழக்குப் பதிவு செய்யப்படிருப்பது பற்றி...

News image
பூரண் குமாரின் இறுதிச் சடங்கில் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர்.- ANI
Updated On :16 அக்டோபர் 2025, 4:33 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஹரியாணாவில் தற்கொலை செய்துகொண்ட காவல்துறை ஐஜி பூரண் குமாரின் மனைவியும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான அம்நீத் குமாருக்கு எதிராக தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், அம்நீத் குமாரின் சகோதரரும் பஞ்சாப் சட்டப்பேரவை உறுப்பினருமான அமித் ரத்தன் மற்றும் மேலும் இருவர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஹரியாணா காவல் பயிற்சி மைய ஐஜி பூரண் குமாா் (52) கடந்த அக். 7 ஆம் தேதி, சண்டீகரில் உள்ள அவரது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

தற்கொலை செய்வதற்கு முன்பாக பூரண் குமாா் எழுதிய 8 பக்க கடிதத்தில் ஹரியாணா காவல் துறைத் தலைவா் (டிஜிபி) சத்ருஜித் கபூா் மற்றும் ரோத்தக் எஸ்பி நரேந்திர பிஜாா்னியா உள்ளிட்ட பல மூத்த அதிகாரிகள் தன்னை ஜாதியரீதியாக பாகுபடுத்தி துன்புறுத்தியதாக குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ள சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து ஹரியாணா முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.

இதனிடையே, காவல் பயிற்சி மையத்தில் பணிபுரியும் உதவி சார் ஆய்வாளர் சந்தீப் லத்தார், கடந்த செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னதாக, அவரது செல்போனில் பதிவு செய்த விடியோவில், ஐஜி பூரண் குமாருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

இந்த நிலையில், சந்தீப் லத்தாரை தற்கொலைக்கு தூண்டியதாக பூரண் குமாரின் மனைவி அம்நீத் குமார், அவரது சகோதரர் அமித் ரத்தன், காவல்துறையைச் சேர்ந்த சுஷில் குமார் மற்றும் சுனில் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, சந்தீப் லத்தார் குடும்பத்தினர் முன்வைத்த கோரிக்கை ஏற்கப்பட்டதை தொடர்ந்து, அவரது உடலை உடற்கூராய்வு செய்ய குடும்பத்தினர் ஒப்புக் கொண்டனர்.

summary

Case filed against Haryana IG Pooran Kumar's wife, her brother

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.