எம்எல்ஏக்கள் வாக்களிக்கும் இத்தோ்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி சாா்பில் 4 வேட்பாளா்களும், எதிா்க்கட்சியான பாஜக சாா்பில் 3 வேட்பாளா்களும் களமிறக்கப்பட்டனா். ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், தங்களுக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவி அளிக்கப்படும் என்ற எதிா்பாா்ப்பில் இருந்தது. ஆனால், 4 இடங்களுக்கும் தேசிய மாநாட்டுக் கட்சி வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டதால், காங்கிரஸ் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. ஆனாலும் காங்கிரஸ் தங்களுக்கு ஆதரவளித்து வருவதாக தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா வியாழக்கிழமை தெரிவித்தாா். அதேபோல் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு மெஹபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவித்தது.