மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மணிப்பூரில் புதியதாக 129 பேருக்கு டெங்கு! 4000-ஐ நெருங்கும் பாதிப்புகள்!

மணிப்பூரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து...

News image
மணிப்பூரில் டெங்கு பரவல்- (கோப்புப் படம்)
Updated On :30 அக்டோபர் 2025, 1:57 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மணிப்பூர் மாநிலத்தில், புதியதாக 129 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

மணிப்பூரில், புதியதாக 129 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்; இதன்மூலம், நிகழாண்டில் (2025) டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை 3,594 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மணிப்பூரில் கடந்த ஜனவரி 1 முதல் அக்டோபர் 28 ஆம் தேதி வரை 7,883 பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டதாகவும்; டெங்கு பாதிப்பால் பிஷ்னுப்பூர் மாவட்டத்தில் ஒருவர் பலியானதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதிகப்படியாக மேற்கு இம்பால் மாவட்டத்தில் 2,507 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மேலும், கிழக்கு இம்பால் - 655, பிஷ்னுப்பூர் - 102, தௌபல் -84, சேனாபதி - 63, காக்சிங் - 45, உக்ருல் - 44 மற்றும் சந்தேலில் - 25 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக, மணிப்பூரில் கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டும் 2,463 டெங்கு பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

summary

In Manipur, 129 new dengue cases have been confirmed, taking the total number of cases to 3,594.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.