ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

19 குழந்தைகளை பிணைக் கைதிகளாக அடைத்து வைத்தவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை!

மும்பையில் 17 குழந்தைகளை பிணைக் கைதிகளாக அடைத்து வைத்திருந்த ரோஹித் ஆர்யா சுட்டுக் கொலை

News image
Updated On :30 அக்டோபர் 2025, 6:51 pm IST

மும்பையில் 17 குழந்தைகளை பிணைக் கைதிகளாக அடைத்து வைத்திருந்தவர் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மும்பையில் விளம்பரப் படத்தில் குழந்தைகளுக்கு வாய்ப்பளிப்பதாக ஆர்ஏ ஸ்டூடியோஸில் பணிபுரியும் ரோஹித் ஆர்யா அறிவித்ததால், ஆடிஷனுக்காக 17 குழந்தைகள் சென்றனர்.

இந்த நிலையில், ஸ்டூடியோஸ் அறைக்குள் குழந்தைகள் நுழைந்ததும், அறையின் கதவை உள்புறமாக ரோஹித் தாளிட்டார். இதனால் சந்தேகமடைந்த குழந்தைகளின் பெற்றோர், உடனடியாக காவல்துறையைத் தொடர்புகொண்டு புகார் அளித்தனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், ரோஹித் ஆர்யாவை மொபைல் போனில் தொடர்புகொண்டு பேசினர். இதனைத் தொடர்ந்து, போலீஸாருக்கு ஒரு விடியோவை ரோஹித் அனுப்பினார்.

ரோஹித் அனுப்பிய விடியோவில், ``பணம் எனது கோரிக்கை அல்ல. நான் சிலரிடம் பேச வேண்டும். அதற்கு போலீஸார் ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனால், என்னால் தற்கொலை செய்துகொள்ள முடியாது என்பதால், குழந்தைகளை பிணைக் கைதிகளாக்கலாம் என்று முடிவு செய்தேன். நீங்கள் ஏதேனும் திட்டம் தீட்டினால், இந்தக் கட்டடத்தை முற்றிலும் தீவைத்து எரித்து விடுவேன்’’ என்று கூறியிருந்தார்.

இதனிடையே, கட்டடத்தின் பின்புறம் வழியாக அறைக்குள் நுழைந்த காவல்துறையினர், குழந்தைகளை விடுவித்துவிட்டு சரணடையுமாறு ரோஹித்திடம் கூறியுள்ளனர். ஆனால், தான் வைத்திருந்த ஏர் கன்-னை வைத்து போலீஸாரை சுட முயன்றார்.

இதனையடுத்து, தற்காப்புக்காக ரோஹித்தை போலீஸார் சுட்டு, குழந்தைகளை பத்திரமாக மீட்டனர். மருத்துவமனையில் ரோஹித் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சைப் பலனின்றி ரோஹித் உயிரிழந்தார்.

Summary

Mumbai: 19 rescued after Powai studio hostage drama; suspect killed in encounter

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.