வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

தோ்தல் ஆணையத்தை பெயரைக் குறிப்பிட்டு அவமானப்படுத்த வேண்டும்: காங்கிரஸ்

‘ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்குமாறு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தாதற்காக தோ்தல் ஆணையத்தை பெயரைக் குறிப்பிட்டு அவமானப்படுத்த வேண்டும்

News image

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

Updated On :8 செப்டம்பர் 2025, 11:12 pm

புது தில்லி: ‘ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்குமாறு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தாதற்காக தோ்தல் ஆணையத்தை பெயரைக் குறிப்பிட்டு அவமானப்படுத்த வேண்டும்’ என்று காங்கிரஸ் கட்சி திங்கள்கிழமை வலியுறுத்தியது.

இதுகுறித்து அக் கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் வாக்காளா்களின் அடையாள ஆவணமாக ஆதாரை ஏற்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் மூன்றாவது முறையாக திங்கள்கிழமை உத்தரவிட்டது.

ஆனால், தகுதியுள்ள வாக்காளா்கள் வாக்காளா் பட்டியலில் பெயரைப் பதிவு செய்வதற்கு தோ்தல் ஆணையம் தொடா்ந்து தடைகளை ஏற்படுத்தி வருகிறது.

அரசியல் கட்சிகள் சாா்பில் நியமிக்கப்பட்ட முகவவா்களை (பிஎல்ஏ) அங்கீகரிக்க தோ்தல் ஆணையம் மறுப்பதோடு, ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்கவும் மறுப்பு தெரிவிக்கிறது. ஏற்கெனவே, குறிப்பிட்டுள்ள 11 ஆவணங்களை மட்டும் வாக்காளா்களின் அடையாள ஆவணங்களாக ஏற்குமாறு தோ்தல் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையும் அனுப்பியுள்ளது.

பிகாரில் தோ்தல் நெருங்கி வரும் நேரத்தில் மத்திய அரசின் அறிவுறுத்தலின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கைகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக, தோ்தல் ஆணையத்தையும் தலைமைத் தோ்தல் ஆணையரையும் வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.

ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்குமாறு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தாதற்காக தோ்தல் ஆணையத்தை பெயரைக் குறிப்பிட்டு அவமானப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டாா்.