உள்நாட்டுத் தயாரிப்புகளைப் பயன்படுத்த நவராத்திரி - தீபாவளி போன்ற விழாக்காலங்கள் வரை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுதேசி மேளா நடத்த தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், அந்தந்தத் தொகுதிகளில் 20 - 30 வணிகர்கள் மற்றும் கடைக்காரர்களை ஒருங்கிணைத்து ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒவ்வொரு எம்.பி.யும் தங்கள் தொகுதியில் ஜிஎஸ்டி சீர்திருத்தம் மற்றும் சுதேசி பயன்பாட்டை வலியுறுத்தும் விதமாக கண்காட்சி நடத்த வேண்டும் என்றும் நமது பாரம்பரியம் என்ற கருப்பொருளை பறைசாற்றும் விதமாக அமைய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
உள்நாட்டுப் பொருள்களை அதிக எண்ணிக்கையில் பயன்படுத்துவதன் மூலம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி அடையும் எனக் குறிப்பிட்டார்.
இந்திய இறக்குமதி பொருள்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்துள்ளது. அதிக வரி விதிப்பால், இந்திய உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகும் உருவாகியுள்ளது.
இதனைத் தவிர்க்கும் சூழலில் உள்நாட்டுத் தயாரிப்புகளை மக்கள் அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி சுதேசி பயன்பாட்டை பிரதமர் மோடி ஊக்குவித்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, பண்டிகை நாள்களையொட்டி அதிக எண்ணிக்கையிலான உள்நாட்டுத் தயாரிப்புகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எம்.பி.க்களுக்கு இன்று அறிவுறுத்தியுள்ளார்.
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் மீதும் ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு குறைத்துள்ளதால், அதனால் ஏற்படும் சாதகங்கள் குறித்தும் வணிகர்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிக்க | ஹிமாசல், பஞ்சாப் வெள்ளம்: நாளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி!
Summary
He urged MPs to hold and encourage swadehi melas from Navratri to Diwali: Sources
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அன்றுபோல் இன்று இல்லை!

தமிழக பட்ஜெட் எதிா்பாா்ப்புகள்... மாவட்டந்தோறும் ஜிஎஸ்டி உதவி மையம் கோரும் வணிகா்கள்

அரசு ஊழியா் காப்பீடுத் திட்டத்தை அரசே நடத்த வலியுறுத்தல்!

கனிமவள முறைகேடு குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்: மணல் லாரி உரிமையாளா் சம்மேளனம் வலியுறுத்தல்
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



