தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை!

பிரதமர் மோடியின் பிறந்தநாள் ஒரு கருப்பு நாள்: காங்கிரஸ் எம்பி விமர்சனம்!

பிரதமர் மோடியின் பிறந்தநாள் குறித்து காங்கிரஸ் எம்பி பிரணிதி ஷிண்டே பேச்சு...

மகாராஷ்டிரத்தின் சோலாப்பூர் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் பிரணிதி ஷிண்டே

Published On :16 செப்டம்பர் 2025, 5:30 pm IST

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள், எதிர்க்கட்சிகளுக்கு ஒரு கருப்பு நாள் என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் பிரணிதி ஷிண்டே கடுமையாக விமர்சித்துள்ளார்.

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் உடனான சந்திப்புக்கு பின், செய்தியாளர்களுடன் பேசிய சோலாப்பூர் மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினர் பிரணிதி ஷிண்டே, நாடு அறிவிக்கப்படாத அவசரநிலையைக் கடந்து வருவதாகவும் எதிர்க்கட்சிகளின் குரல்கள் நசுக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:

“எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. வாக்குகள் திருடப்படுகின்றன. பத்திரிகைகள் தங்களது உரிமைகளை இழந்துவிட்டன. ஊடகங்கள் கோடி மீடியாவாக (மோடிக்கு ஆதரவாகச் செயல்படும் ஊடகங்களின் விமர்சனப் பெயர்) மாறிவிட்டன. விவசாயிகள் சாலைகளில் இறங்கி போராடுகின்றனர். ஆனால் அவர்களது குரல்கள் கேட்கப்படுவதில்லை.

ஒரு பக்கம் நாம் பாகிஸ்தானுடன் சண்டையிடுகிறோம், இன்னொரு பக்கம் நாம் அவர்களுடன் கிரிக்கெட் விளையாடுகின்றோம். நமது விளையாட்டு வீரர்களுக்கு பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கக் கூடாது என அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அப்படியென்றால், எதற்காக விளையாட வேண்டும்?” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சோலாப்பூர் மாவட்டத்தில் மழையினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பேசிய அவர், அனைத்து வகையான விளைச்சல் பயிர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்றும், அரசு விரைந்து இழப்பீடு வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சோலாப்பூர் நகராட்சி ஊழலில் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டிய அவர், கடந்த 4 ஆண்டுகளாக நகராட்சித் தேர்தல்கள் நடத்தப்படாதது ஜனநாயகப் படுகொலை எனக் கூறியுள்ளார்.

Summary

Congress MP Praniti Shinde has strongly criticized Prime Minister Narendra Modi's birthday, calling it a black day for the opposition parties.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.