பாஜகவின் மற்றொரு செய்தித் தொடா்பாளா் சேஷாத் பூனாவாலா இது தொடா்பாக கூறுகையில், ‘ஜம்மு-காஷ்மீா் பிரிவினைவாதத் தலைவா் யாசின் மாலிக் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதத் தலைவா் ஹபீஸ் சையதுடன் காங்கிரஸ் கட்சி பேச்சு நடத்தி இருந்தாலும் வியப்படைவதற்கு ஏதுமில்லை. ஏனெனில், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் பாகிஸ்தான் நிலைப்பாடே காங்கிரஸின் நிலைப்பாடாக இருந்தது. சிந்து நதிநீா் ஒப்பந்தம் மேற்கொண்டு 80 சதவீத நீரை பாகிஸ்தானுக்கு அளித்து வந்தனா். அவா்கள் நடத்துவது இந்திய தேசிய காங்கிரஸ் அல்ல, இஸ்லாமாபாத் தேசிய காங்கிரஸ். பாகிஸ்தான் மீதுதான் காங்கிரஸுக்கு பாசம் அதிகம்’ என்று தெரிவித்துள்ளாா்.