அண்மையில் சவூதி அரேபியாவுக்குச் சென்ற பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், அந்நாட்டு பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மானுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டாா். அதன்படி, பாகிஸ்தான்-சவூதி அரேபியா ஆகிய இரு நாடுகளில் எந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், அது மற்றொரு நாட்டின் மீதும் மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்போது பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீா், பாதுகாப்பு அமைச்சா் கவாஜா ஆசீஃப் ஆகியோரும் உடன் இருந்தனா்.